
சந்தையில் அதிகம் லாபமடைந்த துறைகள்: மெட்டல் (233 சதவீதம்), ஆட்டோ (204 சதவீதம்), சாப்ட்வேர் (132 சதவீதம்), கேபிடல் குட்ஸ் (104 சதவீதம்)
சந்தை இந்தளவு கூடியது எப்படி? அதிகமாக வந்த வெளிநாட்டு முதலீடுளே சந்தை கூடியதற்கு காரணம். வெளிநாட்டு நிறுவனங்கள், 83,000 கோடி ரூபாயை, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. அதுவே, சந்தையை இந்த அளவு தூக்கிச் செல்ல காரணம்.
2010ம், புதிய வெளியீடுகளும்: 2010ம் ஆண்டு, புதிய வெளியீடுகளின் ஆண்டாக இருக்கும். அதாவது, இரண்டு வாரத்திற்கு ஒரு புதிய வெளியீடு என்ற வகையில், பல வெளியீடுகள் வரவிருக்கின்றன. அவற்றில் பல அரசு வெளியீடுகள். தயாராக இருங்கள். புதிய வெளியீடுகளில் பணம் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கும்.
2010 எப்படி இருக்கும்? ஜன., 1 முதல் 3ம் தேதி வரை, சந்தை விடுமுறை. 4ம் தேதி(நாளை) முதல் நீங்கள், 'டிவி' பெட்டிக்கு முன் 9 மணிக்கே உட்கார வேண்டியிருக்கும். ஆமாம், சந்தை 9 மணிக்கே தொடங்கிவிடுகிறது. வாக்கிங் செல்பவர்கள் இன்னும் அதிகாலையிலேயே சென்று விடுவது உடலுக்கும் நல்லது, சந்தைக்கும் நல்லது. இதே காளை பாய்ச்சல் இருக்கும் என்று எல்லாரும் ஒருமித்து நம்புகின்றனர்.
அரசும் ஜி.டி.பி., வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. அதனால், சந்தை 20,000 முதல் 23,000 புள்ளிக்குள் முடியும் வாய்ப்பு அதிகம்.
எங்கு முதலீடு செய்வது? சந்தை இப்படி தாறுமாறாக போய் கொண்டிருப்பதால், எந்த பங்கில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் வரும். நடுத்தர மற்றும் சிறிய பங்குகளுக்கு, மவுசு இன்னும் அதிகம் இருக்கிறது. அவை, சிறப்பாக பரிணமிக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர, சாப்ட்வேர், மெட்டல், கட்டுமானத்துறை, மின்சாரம், வங்கித்துறை ஆகியவை பிரகாசிக்க வாய்ப்பு அதிகம் உண்டு. சில மருந்து கம்பெனிகள் நன்கு பிரகாசிக்கும். அதே சமயம், ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும். ஆதலால், முதலீடுகளை ஒவ்வொரு சரிவிலும் தொடர்ந்து செய்து வாருங்கள். லாபம் பெருகும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்
2 comments:
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி............
Rebacca வருகைக்கு நன்றி
Post a Comment