Wednesday, December 16, 2009

பட்​டி​யல் போடுங்​கள்

உடல் உறுப்பு தானம் செய்​வோர் எண்​ணிக்கை பெருகி வரு​வ​ தும்,​​ அத​னால் பலர் பய​ன​டைந்து வரு​வ​தும் மகிழ்ச்சி தரும் செய்​தி​கள்.​ உடல் உறுப்பு தானம் பற்​றிய விழிப்​பு​ணர்வு,​​ ஹிதேந்​தி​ர​னின் உடல் உறுப்​பு​க​ளைத் தானம் அளிக்க முன்​வந்த டாக்​டர் தம்​ப​தி​யால் தமிழ்​நாடு முழு​வ​தும் பர​வ​லா​யிற்று.​ தற்​போது மூளைச் சாவு ஏற்​பட்ட நோயா​ளி​க​ளின் உறுப்​பு​க​ளைத் தான​மாக அளிக்க முன்​வ​ரு​வோர் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ ​

தமிழ்​நாடு சுகா​தா​ரத் துறைச் செய​லர் சுப்​பு​ராஜ் குறிப்​பி​டு​வ​தைப் போல,​​ சரா​ச​ரி​யாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்​து​கொண்​டி​ருந்த நிலைமை மாறி​யுள்​ளது.​ இம்​மா​தம் 10,​ 12 ஆகிய இரு நாள்​க​ளில் 5 உறுப்​பு​தான உடல்​கள் பெறப்​பட்டு,​​ பல்​வேறு உறுப்​பு​மாற்று அறு​வைச் சிகிச்​சை​யால் 15 பேர் ​ பய​ன​டைந்​துள்​ள​னர்.​ ​ இது​வரை 100 சிறு​நீ​ர​கங்​கள்,​​ 14 கல்​லீ​ரல்​கள் தேவை​யான நோயா​ளி​க​ளுக்​குப் பொருத்​தப்​பட்​டுள்​ளன.​

விழிப்​பு​ணர்வு மேலும் அதி​க​ரிக்​கும்​போது உறுப்​பு​தான உடல்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் கிடைக்​கும் என்​ப​தில் சந்​தே​க​மில்லை.​ ஆனால் இந்த உறுப்​பு​க​ளைப் பெறு​வ​தில் சங்கி​லித் தொடர் நிறு​வன மருத்​து​வ​ம​னை​கள் முன்​னு​ரிமை பெறு​வ​தை​யும்,​​ பண​வ​சதி படைத்​த​வர்​கள் மட்​டுமே இத்​த​கைய மருத்​து​வ​ம​னை​க​ளில் ​ உறுப்பு மாற்​றுச் சிகிச்​சை​யால் பயன்​பெ​று​கி​றார்​கள் என்​ப​தை​யும் பார்க்​கும்​போது,​​ பழை​ய​ப​டியே முறை​கே​டு​கள் தொடங்​கி​வி​டுமோ என்ற அச்​சம் எழு​கி​றது.​

உடல்​தா​னம் செய்​யும் குடும்​பத்​தி​னர் ஏழை,​​ நடுத்​தர வரு​வாய்ப் பிரி​வி​னர்,​​ பணக்​கா​ரர்​கள் என்று பல வித​மாக இருக்​கி​றார்​கள்.​ அவர்​கள் இந்த உறுப்​பு​கள் யாருக்​குப் பொருத்​தப்​பட வேண்​டும் என்று விருப்​பம் தெரி​விப்​ப​தில்லை.​ விருப்​பம் தெரி​விக்​க​வும் முடி​யாது.​ உடல்​உ​றுப்பு மாற்​றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இய​லும் என்​ப​தை​யும்,​​ தானம் பெற்ற உறுப்​பின் அளவு,​​ திசுக்​கள் அதைப் பொருத்​திக்​கொள்​ளும் நோயா​ளி​யின் உடல் ஏற்​குமா என்​ப​தை​யும் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மருத்​துவ வல்​லு​நர் குழு​தான்.​

உறுப்பு மாற்​றுச் சிகிச்​சைக்​கான நவீன மருத்​து​வக் கரு​வி​களை வைத்​தி​ருக்​கும் மருத்​து​வ​ம​னை​கள் அனைத்​துமே பெரிய,​​ நிறு​வ​ன​மாக்​கப்​பட்ட மருத்​து​வ​ம​னை​க​ளாக உள்​ளன.​ விதி​வி​லக்​காக,​​ சென்​னை​யில் தலைமை அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ​ அதி​க​பட்​ச​மாக ஸ்டான்லி மருத்​து​வ​மனை அல்​லது கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​க​ளில் இந்த வசதி இருக்​கக்​கூ​டும்.​ மற்​ற​படி,​​ மாவட்ட அள​வி​லான அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் இதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லவே இல்லை என்​ப​து​தான் ​ நிலைமை.​

உடல்​தா​னம் செய்​வோர் எந்​த​வித பிர​தி​ப​ல​னும் எதிர்​பா​ரா​மல்,​​ மூளை இறப்​புக்கு உள்​ளான தங்​கள் குடும்ப அங்​கத்​தி​ன​ரின் உடல்​உ​றுப்​பு​கள் யாருக்​கா​வது பயன்​ப​டட்​டுமே என்​கிற நல்​லெண்​ணத்​தில் மட்​டுமே அளிக்​கின்​ற​னர்.​ இவ்​வாறு இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டும் உடல்​உ​றுப்​பு​கள் எந்​த​வொரு தனிப்​பட்ட மருத்​து​வ​ம​னைக்​கும் சொந்​த​மா​னது அல்ல.​ தற்​போ​தைய நடை​மு​றை​யில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான ஒருங்​கி​ணைப்​பா​ளரை அரசு நிய​மித்து,​​ தான​மா​கக் கிடைத்த உறுப்​பு​கள் யாருக்கு அளிக்​கப்​பட வேண்​டும் என்​பது முறைப்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இந்த நடை​மு​றை​யில் வெளிப்​ப​டைத் தன்​மையை தமி​ழக அரசு புகுத்த வேண்​டும்.​ ​

தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர் பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​ அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​து​தல் இணை​யம் ​(ஞட​பச)​ உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப் பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில் உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும்.​ ​ சிறு​நீ​ர​கத் திருட்​டு​கள் நடை​பெற்ற தமி​ழ​கத்​தில்,​​ இத்​த​கைய வெளிப்​ப​டைத் தன்மை மிக​வும் அவ​சி​ய​மா​கி​றது.​ ​

இதனை வலி​யு​றுத்த இன்​னொரு முக்​கிய கார​ணம்,​​ தமி​ழ​கத்​தில்​தான்,​​ முதல்​மு​றை​யாக தானம்​பெற்ற கல்​லீ​ரல் ஒரு அயல்​நாட்​ட​வ​ருக்கு அண்​மை​யில் பொருத்​தப்​பட்​டுள்​ளது.​ சென்னை தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் கல்​லீ​ரல் அழற்சி நோயால் அவ​திப்​பட்டு வந்த இராக் நாட்​டைச் சேர்ந்த நோயாளி பய​ன​டைந்​தி​ருக்​கி​றார்.​ ஸ்டான்லி அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ஒரு தனி​யார் மருத்​து​வ​ம​னை​யி​லும் கல்​லீ​ரல் மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான பொருத்​த​மான ​ நோயா​ளி​கள் இருக்​கி​றார்​களா என்று தேடி​ய​போது,​​ அங்கு இல்​லாத கார​ணத்​தால்,​​ ஒரு உறுப்பு வீணா​கி​வி​டக் கூடாதே என்​கிற நோக்​கில்,​​ அயல்​நாட்​ட​வர் தேர்வு செய்​யப்​பட்​ட​தாக விளக்​கம் தரப்​ப​டு​கி​றது.​ இது உண்​மை​யாக இருக்​க​லாம்.​ இருப்​பி​னும்,​​ இதே​போன்ற நிலைமை தொட​ரக்​கூ​டாது.​ ஏனென்​றால்,​​ இந்​தி​யா​வுக்கு மருத்​து​வச் சிகிச்​சைக்​காக வரு​வோர் எண்​ணிக்கை ஆண்​டு​தோ​றும் அதி​க​ரித்​துக்​கொண்டே வரு​கி​றது.​ அமெ​ரிக்​கா​வில் ஆகும் செல​வைக் காட்​டி​லும் மிகக் குறைந்த செல​வில்,​​ இங்கே ஐந்​து​நட்​சத்​திர ஹோட்​டல் போன்ற வச​தி​யுள்ள தனி​அ​றை​க​ளில் தங்கி,​​ தர​மான சிகிச்சை பெற்று நல​மா​கத் திரும்ப முடி​கி​றது என்​ப​து​தான் இதற்​குக் கார​ணம்.​ அவ்​வாறு வரு​வோர் எவ்​வ​ளவு பணம் வேண்​டு​மா​னா​லும் செல​வ​ழிக்​கத் தயா​ராக வரு​கின்​ற​னர்.​

அமெ​ரிக்கா உள்​ளிட்ட மேலை நாடு​க​ளில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​காக ஒரு சிறு​நீ​ர​கமோ அல்​லது கல்​லீ​ரலோ,​​ இத​யமோ வேண்​டும் என்​றால் அதற்​கா​கக் காத்​தி​ருப்​போர் பட்​டி​யல் மிக​மிக நீள​மாக இருக்​கும்.​ கிடைத்​தா​லும் அதற்​கான செலவு குறைந்​தது ஒரு லட்​சம் டாலர் ஆகி​றது.​ இது போதுமே-​இந்​திய மருத்​துவ உல​கில் முறை​கே​டு​களை முடுக்​கி​வி​டு​வ​தற்கு!​

உடல்​தா​னம் குறித்த விழிப்​பு​ணர்வு பர​வ​லா​கும் இந்த வேளை​யில்,​​ உடல்​உ​றுப்​பைத் தானம் பெறக் காத்​தி​ருப்​போர் மற்​றும் தானம் அளித்​தோர்,​​ சிகிச்சை நடை​பெற்ற மருத்​து​வ​ம​னை​கள் பற்றி வெளிப்​ப​டை​யாக அறி​விப்​பது முறை​கே​டு​க​ளைப் பெரு​ம​ளவு குறைக்​கும்.​​
நன்றி : தினமணி

No comments: