Wednesday, November 25, 2009

கோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி


யுபிஎஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ், சூரிய ஒளியில் 1.5 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.25 கோடியை நியூமரிக் பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. எல்இடி தெருவிளக்குகளை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பான எரிசக்தி கருவிகளை தயாரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக் கருவிகள் தயாரிக்கவும் நியூமரிக் முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.50 கோடி முதலீட்டில் கோவையில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட உள்ளது.

நன்றி : தினமலர்


No comments: