Wednesday, November 25, 2009

சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு


சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல் ரூ.7800 இல்லை எனவும் உண்மையான தொகை ரூ.14000 கோடி என்கிறது சிபிஐ. நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது. மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 6,000 ஏக்கர் நிலம், 40,000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90,000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.

நன்றி : தினமலர்


No comments: