Sunday, August 30, 2009

பயணப்படி, ஊக்கத்தொகை: ஏர் இந்தியா நிறுத்துகிறது

ஏர் -இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கான பயணப்படி மற்றும் ஊக்கத் தொகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவிலான பொருளாதார சரிவு, எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விமான நிறுவனங்கள், கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் -இந்தியா, ஏழாயிரத்து 200 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனால், மாதா மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட கஷ்டப்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பயணப்படியை நிறுத்த, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கான மொத்த செலவில், ஊக்கத்தொகைக்கு மட்டும், 30 முதல் 70 சதவிகிதம் வரை செலவு ஆகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விமான நிறுவன அதிகாரிகள், ' ஊழியர்களின் பணியாற்றுதல் திறமைக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை யை மாற்று வழியில் ஈட்ட முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தனர். ஊக்கத் தொகை மற்றும் பயணப்படிக்காக மட்டும், மாதம் 350 கோடி ரூபாய் விமான நிறுவனத்தால் செலவிடப்படுகிறது. நிறுவனத்தின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விமான நிறுவன ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி : தினமலர்


No comments: