Wednesday, August 26, 2009

சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் மூடல்

சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் ஒன்று மூடப்பட்டுள்ளது. லண்டனின் பரபரப்பான பகுதியில் இயங்கி வந்த ரெஸ்டாரண்ட் ஏ நைட் இன் இந்தியா. இந்த உணவு விடுதியில், பிரிட்டனர் சுகாதார துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையல் செய்யும் இடத்தில் எலிகள் ‌திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதிய அளவு சுடுதண்ணீரும் இல்லை. லீசெஸ்ட் ‌மேஜிஸ்திரேத்திடம் சுகாதார கேடு குறித்த சாட்சிகள் ஒப்படைக்கப்பட்டன. சுகாதார அதிகாரியின் பரிந்துரையை பரிசீலித்த நீதிபதி ஓட்டலை மூட உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு தவற‌ை திருத்தி ‌கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போதிய நீராதாரம் , கைகழுவும் இடத்தில் பேக்டீரியா தடுப்பு ஜெல், சுத்தமான தரை, சுகாதாரமான கிச்சன் என உணவு விடுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்து, சுகாத‌ார அலுவலகரின் அனுமதி பெற்றால் ஓட்டலை மீண்டும் திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: