Tuesday, August 25, 2009

ஓக்ஹார்ட் ஹாஸ்பிடல்சிடம் இருந்து 10 மருத்துவமனைகள் வாங்குகிறது போர்டிஸ் ஹெல்த் கேர்

ஓக்ஹார்ட் நிறுவனத்தின் 10 மருத்துவமனைகளை டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போர்டிஸ் நிறுவனம் ரூ.909 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், கோல்கட்டாவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மற்றும் பெங்களூருவில் உள்ள 5 மருத்துவமனைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இவற்றின் மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1902 ஆகும். இந்த எட்டு மருத்துவமனைகளுடன், தற்போது கட்டப்பட்டு வரும் இரு மருத்துவமனைகளையும் சேர்த்து வாங்கியுள்ளது போர்டிஸ். இந்த ஒப்பந்தத்துக்கான பணத்தில் ரூ.350 கோடியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது போர்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓக்ஹார்ட் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக இந்த மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இவற்றை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே அப்பல்லோ மற்றும் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகங்கள் முயன்று வந்தன. ஆனால் இறுதியில் இந்த டீல் போர்டிஸுக்கே சாதகமாக முடிந்தது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனை விற்பனை ஒப்பந்தம் இதுவே. இதற்கு முன்னதாக போர்டிஸ் நிறுவனம் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை கடந்த 2005ம் ஆண்டு வாங்கியது தான் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருந்தது. இணைப்பு மூலம் நாட்டின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காக வொக்கார்ட்
நன்றி : தினமலர்


No comments: