Tuesday, July 28, 2009

சீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது

பளபளப்பான கவர்களில் பார்சல் செய்யப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து வந்த சீனா தயாரிப்பு சாக்லேட்கள் இனிமேல் இந்தியாவில் கிடைக்காது. அந்நாட்டு சாக்லேட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சீன தயாரிப்பு பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தடைவிதித்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில் சாக்லேட்டும் சேர்ந்திருக்கிறது. சீன தயாரிப்பு பால் பொருட்களிலும் நச்சு கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்து, அதற்கு பல நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவும் தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்குள் வரும் சீன தயாரிப்பு சாக்லேட்கள் பெரும்பாலும் முறையான வழிமுறையில் வருவதில்லை என்றும், கள்ள மார்க்கெட் வழியாகத்தான் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாக்லேட்களுக்கு இருக்கும் சுமார் ரூ.2,000 கோடி சந்தையில், சீன சாக்லேட்கள் வெறும் 5 - 10 சதவீத பங்கையே வைத்திருக்கின்றன. எனவே இந்த தடையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொருவரும் 10 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவரும் 40 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.
நன்றி : தினமலர்


1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்