Tuesday, July 28, 2009

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. வங்கிகளின் பங்குகள் மற்றும் ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, கிராசிம், ஐடியா, ஏபிபி, ரேன்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. பவர், டெலிகாம், ரியாலிட்டி, சிமென்ட், மெட்டல் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.10 புள்ளிகள் குறைந்து 15,331.94 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 8.20 புள்ளிகள் குறைந்து 4,564.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: