Monday, July 6, 2009

பால் வர்த்தகத்தில் மீண்டும் நுழைகிறது பிரிட்டானியா

பிரிட்டானியா நிறுவனம் சுவையூட்டப் பட்ட பால் வர்த்தகத் துறையில் மீண்டும் நுழையத் தயாராகி வருகிறது. பிரிட்டானியா நிறுவனம் பிஸ்கட் மற்றும் பால் பொருட்களால் தயாரான பொருட் களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இத்துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பிரிட்டானியாவும் ஒன்று. கடந்த 1997ல் இந்நிறுவனம் சுவையூட் டப்பட்ட பாலை பாக் கெட்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது. மேலும், சமீபகாலமாக இளைஞர்கள் விரும்பி குடிக்கும் பானமாக சுவையூட் டப்பட்ட பால் உருவெடுத்துள் ளது. இதனால், சுவையூட்டப் பட்ட பாலை பாக் கெட்களில் அடைத்து, எந்த நேரத்திலும் குடிக் கும் வகையில் விற் பனை செய்ய மீண் டும் தயாராகி வருகிறது. பால் வர்த்தகத்தில் மீண்டும் நுழைவதற்காக பிரிட்டானியா நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீடு செய் யும் என எதிர் பார்க் கப்படுகிறது. இருந்தாலும், இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நன்றி : தினமலர்



No comments: