Monday, July 20, 2009

பிளாஸ்டிக் பொருட்கள் விலை அபார உயர்வு: குடம் விலை இனி ரூ.35

கச்சாவிலை உயர்வு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந் துள்ளது. இதனால் குடம், பக்கெட், பிளாஸ்டிக் மக், பிளா ஸ்டிக் கப், பிளாஸ்டிக் பைகள் போன்றவை 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது உப பொருளாக வெளிவரும் நாப்தாவில் இருந்து தான் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போதெல்லாம், நாப்தாவின் விலையும் உயருகிறது. பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலையும் உயருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட குடம் தற்போது 35 ரூபாய்க் கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் 40 ரூபாய்க் கும், 'மக்' என்ற கோப்பை ஏழு ரூபாயில் இருந்து 10 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், 10 பைசாவில் இருந்த ஒரு 'கேரி பேக்' தற்போது 20 பைசாவாகவும், பிளாஸ்டிக் டம்ளர் 10 பைசாவில் இருந்து 20 பைசாவாகவும் விலை உயர்ந்துள்ளது. தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்தப்படும் பெட் பாட்டில் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், தண்ணீர் பாட்டில் தயாரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் சத்தமின்றி அதிகபட்சம் இரண்டு ரூபாய் வரை ஒவ்வொரு தண்ணீர் பாட்டிலுக்கும் உயர்த்தி விட்டன.
தமிழகத்துக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் டன் மூலப்பொருள் தேவை. ஆனால், தற்போது 40 ஆயிரம் டன் மட்டுமே சப்ளையாகிறது. காரணம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் ஒரு தனியார் நிறுவனம் தான் பெரிய அளவில் தயாரிக்கிறது. அந்தந்த மாநிலங் களை சேர்ந்தவர்கள், பக்கத்து மாநில நிறுவனங்களே அதிகளவில் மூலப் பொருட்களை வாங்கி 'ஸ்டாக்' வைத்து கொள்கின்றன. இதனால் தமிழகத்தின் தேவைக்கேற்ப மூலப் பொருட்கள் கிடைப்பது இல்லை. வெளிமாநில நிறுவனங்களுக்கு அருகிலேயே குறைவான விலைக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதால், அவர்களால் குறைந்த அடக்க விலையில் உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால், பல வரிகளை செலுத்தி தான் வெளிமாநிலங்களில் இருந்து மூலப் பொருட்களை தமிழக உற்பத்தியாளர்கள் வாங்குகின்றனர். இதனால், வெளிமாநில பிளாஸ்டிக் நிறுவனங்களுடன் தமிழக உற்பத்தியாளர்களால் போட்டி போட முடிவதில்லை. வெளிமாநிலங்களில் இருந்து மாதந்தோறும் 50 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட் கள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ் டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் சங்கரன் கூறியதாவது:பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலை தென்னிந்தியாவில் எங்குமே கிடையாது. மூலப் பொருட்கள் பிரச்னையால் தான் பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயருகிறது. மதுரையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அழகிரி அறிவித்துள்ளார். இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொழிற்சாலை வந்தால் பிரச்னை தீர்ந்து விடும். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், வெளிமாநில நிறுவனங்களுடன் போட்டி போட முடியும். தமிழகத்தில் இருந்து வெளிமாநிங்களுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும். இவ்வாறு சங்கரன் கூறினார்.
'மரங்களுக்கு பாதுகாப்பு': பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்களால் அதிக நன்மையும் உள்ளதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் இரும்பை பயன்படுத்தி கார்கள் தயாரிக்கப்பட்டன. இதனால், கார்கள் அதிக எடை கொண்டதாக இருந்தன. ஆனால், தற்போது கார் தயாரிப்பில் 30 சதவீதம் வரை பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கார்கள் எடை குறைவானதாகவும், அதிக மைலேஜ் தரக் கூடியதாகவும் இருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைகிறது. காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு கலப்பதும் பெரிய அளவில் தடுக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச ஆப்பிள்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப ஏழு கோடி மரப் பெட்டிகள் தேவைப்படும். ஆனால், தற்போது பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதால் மரங்கள் அழிக்கப் படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதே விஷயம் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலிலும் சுட்டிக் காட்டப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: