Monday, July 20, 2009

'10 ரூபாய் நாணயத்தால் விற்பனை அதிகரிக்கும்'

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும், என பல்வேறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஐந்து ரூபாயை போலவே 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. அதிகம் புழங்க உள்ள இந்த 10 ரூபாய் நாணயத்தால் தங்கள் நிறுவன பொருட்கள் அதிகம் விற்பனையாகும், என இந்துஸ்தான் யூனி லீவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் கொடுத்தாலே சாக்லேட், குளிர்பானங்கள், ஷாம்பு பாக்கெட்கள், பிஸ்கட்கள், சில வகை சோப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். பைசாக்கள் அதிகம் மதிப்பில்லாதவை என்ற காரணத்தால் இந்த பொருட்களை வாங்க மக்கள் தயங்குவதில்லை. ஆனால், பாக்கெட்டில் உள்ள ரூபாய் நோட்டை எடுத்து பொருட்களை வாங்க சிக்கனமான ஆசாமிகள் தயங்குவர். 10 ரூபாய் நோட்டு வடிவத்தில் இருந்ததால் அதை அதிகம் பயன்படுத்த மக்கள் தயங்கினர். ஆனால், தற்போது 10 ரூபாய் நாணயம் அதிகம் புழக்கத்துக்கு வந்து விட்டால், அதன் மதிப்பு பைசாவில் உள்ளதால் 10 ரூபாய்க்கு கிடைக்கும் பொருட்கள் அதிகம் விற்பனையாகும், என வர்த்தக நிறுவன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 'இரண்டு ரூபாய் ஷாம்பு வேண்டும், ஒரு ரூபாய் சாக்லேட் வேண்டும்' என கேட்கும் வாடிக்கையாளர்கள் இனி, '10 ரூபாய் சோப்பு வேண்டும்' என ரூபாயின் மதிப்பை வைத்தே பொருட்களை அதிகம் வாங்குவர், என்கின்றனர் வர்த்தக வல்லுனர்கள்.
நன்றி : தினமலர்


No comments: