Friday, May 29, 2009

பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் அபாரம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள், அவற்றின் தலைமை அலுவலகங்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில், தாய் நிறுவனங்களை விட, இந்திய கிளைகளின் செயல்பாடுகளும், வருவாயும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள் வரை அவற்றின் வர்த்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின், வெளிநாட்டுக் கிளைகளை விட, இந்திய கிளைகளின் வர்த்தகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சுவிஸ் சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இரண்டு இந்திய குழும நிறுவனங்களான ஹோல்சிம், ஏ.சி.சி., மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்கள், நான்காவது காலாண்டில் வருவாயை கணிசமாக அதிகரித்துள்ளன. இதில் ஹோல்சிம் நிறுவனம், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளது.
தலைச்சிறந்த மருந்து பொருள் உற்பத்தி நிறுவனமான மெர்க் இந்தியாவின் லாபமும், முதல் மூன்று மாதங்களில் 47 சதவீதம் குறைந்துள்ளது. இதன் ஜெர்மன் நாட்டு தாய் நிறுவனத்தின் லாபம் 75 சதவீதம் குறைந்துள்ளது.
இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், முதல் நான்கு மாதங்களில் லாபத்தை அதிகரித்துள்ளது. ஆனால், இதன் தாய் நிறுவனத்தின் வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது. சுவிஸ் சிமென்ட் நிறுவனமாக ஹோல்சிம்மின் இரண்டு இந்திய குழும நிறுவனங்கள் ஏ.சி.சி., மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களும் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டி உள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஏ.சி.சி., நிறுவனம், 399.34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
நன்றி : தினமலர்


No comments: