Monday, April 20, 2009

10 பெரிய கம்பெனிகளின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடி உயர்ந்தது

கடந்த வாரம் இந்திய பங்கு சந்தை நல்ல ஏற்ற நிலையில் இருந்ததால், இந்தியாவின் 10 பெரிய நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு கடந்த வாரம் ரூ.7,228 கோடி குறைந்திருந்தும் கூட, நான்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,512 கோடி அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பெரிய கம்பெனிகளின் மொத்த சந்தை முதலீடு ரூ.12,19,886 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் அது ரூ.11,91,375 கோடியாக இருந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை முதலீடு கடந்த வாரத்தில் ரூ.2,447 கோடியும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு ரூ.4,780 கோடியும் குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: