Thursday, March 5, 2009

ஏர் இந்தியா கோடை கால அட்டவணை அறிவிப்பு

சென்னையில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான பயண நேரத்தை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை : தினசரி சென்னையில் இருந்து லண்டன், பிராங்பர்ட், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு செல்லும் வகையில் இணைப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நகரங்களுக்கான பயண நேரம் குறித்த கோடை கால அட்டவணையை தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து செல்லும் பயணிகள், மும்பையில் இணைப்பு விமானத்திற்காக முன், நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்தனர். தற்போது செய்துள்ள ஏற்பாட்டின் படி, காத்திருக்கும் நேரம் ஒரு மணி 30 நிமிடங்கள் முதல் மூன்று மணி என்ற அளவில் குறையும். சென்னை - லண்டன் பயண நேரம் 16 மணி 30 நிமிடம் என்பது, தற்போது 14 மணி 30 நிமிடமாக குறையும். சென்னை - நியூயார்க் பயண நேரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் குறையும். சென்னை - சிகாகோ பயண நேரம் மூன்று மணி 50 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் பயணிக்கு சென்னையிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டு சென்றடையும் நகரத்திற்கு அவர்களின் பேக்கேஜ்கள் சென்றடையும் வசதியும் உள்ளது. வரும் 29ம் தேதி முதல் கோடை கால அட்டவணை திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: