Friday, March 20, 2009

மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் : முதலீட்டாளர் வில்பர் ராஸ்

மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் என்று முதலீட்டாளர் வில்பர் ராஸ் தெரிவித்தார். நியுயார்க்கில் இன்சூரன்ஸ் குறித்து நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஸ் இவ்வாறு தெரிவித்தார். மொத்தம் 1,000 வங்கிகள் வீழும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதில் ஏற்கனவே 200 வங்கிகள் வீழ்ந்து விட்டது என்றும், இன்னும் 800 வங்கிகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். கடும் நிதி சிக்கலில் இருக்கும் 250 வங்கிகள் இப்போது பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் முடிய உள்ள காலாண்டு நிதி அறிக்கை வெளியானதும் இன்னும் நிறைய வங்கிகள் அதன் கண்காணிப்புக்குள் வந்து விடும் என்றார் அவர். இந்த வருட துவக்கத்தில்தான், புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபர்ஸ்ட் பேங்க் அண்ட் டிரஸ்ட் கம்பெனி என்ற நலிவடைந்த வங்கியின் 68 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அவர் வாங்கியிருந்தார். வில்பர் ராஸ் க்கு நியுயார்க்கில், டபிள்யூ எல் ராஸ் அண்ட் கோ என்ற முதலீட்டு நிறுவனம் இருக்கிறது. இதன் மூலம் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.
நன்றி : தினமலர்


No comments: