Tuesday, February 17, 2009

தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவாக உயர்வு

ஏற்கனவே உயரத்தில் இருக்கும் தங்கத்தின் விலை இன்று என்றுமில்லாத அளவாக உயர்ந்து விட்டது. புதுடில்லியில் இன்றைய காலை வர்த்தகத்தின் போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,200 ஆக உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 960.20 டாலராக இருக்கிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், முதலீட்டாளர்கள் இப்போது தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் 10 கிராமுக்கு ரூ.360 கூடியிருக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாலும் இந்தியாவில் இது கல்யாண சீசனாக இருப்பதாலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


No comments: