
'டிராய்' தன் முடிவை இப்போது பரிந்துரை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினாலும், இறுதி முடிவு, மார்ச் மாதம் எடுக்க உள்ளது.
அப்போது தான் இது தொடர்பாக முழு விவரம் தெரியும். இந்தியாவில் மொபைல் போன் சேவை, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப முறைகளில் தரப்படுகிறது. ஜி.எஸ்.எம்., முறையில் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ள சந்தாதாரர்கள் தான் அதிகம். சி.டி.எம்.ஏ.,வில் கணிசமாக குறைவாகத்தான் உள்ளனர். இதனால், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்களை விட, ஜி.எஸ்.எம்.,நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. போட்டி காரணமாக, சந்தாவை குறைத்து, அதனால், ஓரளவு இழப்பை தான் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், 'டிராய்' திட்டம் பற்றி மொபைல் நிறுவனங்கள் தரப்பில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. 'டெர்மினேஷன் கட்டணத்தை ஒன்பது பைசாவாக குறைக்க வேண்டும். அப்போது தான் எல்லா நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படாமல் வர்த்தக போட்டியை சமாளிக்க முடியும்' என்று சில நிறுவனங்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதி முடிவு தெரிந்த பின், மொபைல் கட்டணம் அதிக பட்சம் 30 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, சாதா போன் சந்தாதாரர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment