Thursday, November 13, 2008

உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி : போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார இந்தியர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிதான் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வருடந்தோறும் பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது. இப்போது வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் உலகிலேயே பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானிதான் என்று தெரிவித்திருக்கிறது. லண்டனில் இருக்கும் இந்தியரான லட்சுமி மிட்டலை பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி முதல் இடத்திற்கு வந்து விட்டார். அவரின் சொத்து மதிப்பு 20.8 பில்லியன் டாலர் என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்ட லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர் என்றும் முன்றாவதாக இருக்கும் அனில் அம்பானியில் சொத்து மதிப்பு 12.5 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் 7.9 பில்லியன் டாலருடன் நான்காவதாகவும் , ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி.சிங் 7.8 பில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவின் காரணமாகவும், இந்தியாவின் 40 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை குறைந்து போனது. கடந்த வருடம் 351 பில்லியன் டாலராக இருந்த இவர்களின் மொத்தசொத்து மதிப்பு இந்த வருடத்தில் 139 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இந்திய பங்கு சந்தை 48 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 சதவீதம் குறைந்திருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கமும் தொடர்ந்து இரட்டை இலக்கணமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர்களின் சொத்து மதிப்பு குறைந்திருப்பதாக அது தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: