Saturday, November 22, 2008

துபாய் செயற்கை தீவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரிசார்ட் நேற்று திறப்பு

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வளைகுடா கடற்கரையில், செயற்கையாக பனைமர ஓலை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தீவில் கட்டப்பட்டுள்ள உலகின் அதிக காஸ்ட்லியான பிரமாண்ட ரிசார்ட் அட்லாண்டிஸ், நேற்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழா நிகழ்ச்சியில் உலகின் முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ உள்பட பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட பிரமாண்ட வானவேடிக்கை, வேறு கிரகத்தில் இருப்பவர்களுக்குகூட தெரிந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு நடத்தப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக இங்கு நடத்தப்பட்டது. துவக்கவிழா நிகழ்ச்சியில் பாட்டு பாடிய ஆஸ்திரேலிய பாப் பாடகி கைலி மினோகுவுக்கு, அதற்காக 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டதாம். 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட ரிசார்ட்டில் 1539 ரூம்களும், 150 சூட்களும், 35 அதி நவீன சூட்களும் இருக்கின்றன. இதில் உள்ள சாதாரன ரூமில் ஒரு நாள் தங்குவதற்கான, குறைந்த பட்ச வாடகையே 1,675 பவுண்ட் ( சுமார் ரூ.1,24,000 ) என்று சொல்லப்படுகிறது. ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.18 லட்சம் வாங்கும் ஸ்பெஷல் சூட்டும் அங்கு இருக்கிறது. இந்த ஹோட்டலின் இரு மெயின் பில்டிங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் ஸ்பெஷல் சூட்டில் நேற்று ஆரம்ப நாளில், அமெரிக்காவின் டி.வி. ஷோ பிரபலலம் ஓபரா வின்ட்ஃபிரே தங்கியிருந்தார். கொஞ்சம் நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி விட்டதால் அந்த சூட்டில், பின்னர் நம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தங்கியிருக்கிறார்.
நன்றி : தினமலர்

No comments: