Saturday, November 22, 2008

யாகூ நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

யாகூ இன்கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெர்ரி யாங், புதியவர் பணியமர்த்தப் பட்டதும், பதவி விலக உள்ளார்.யாகூ நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜெர்ரி யாங், 2007 ஜூன் மாதம் இந்நிறுனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப் பேற்றார். இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு திரும்ப உள்ளார். இதனால், புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க, யாகூ இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது.'யாகூ நிறுவனத்தை துவக்கியதில் இருந்து, நம்பிக்கைக்குரிய சர்வதேச நிறுவனமாக வளர்ச்சிப்பாதையை சென்றடைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கும், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பானதை அளிப்பதே எனது நோக்கம்' என்று, யாங் கூறியுள்ளார்.'சர்வதேச வியூகத்தில் கவனம் செலுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. யாகூ நிறுவனத்துக்கு சிறப்பானதை செய்வதையே விரும்புகிறேன்' என்றும், அவர் கூறியுள்ளார்.நிர்வாகிகள் தேர்வு நிறுவனமான, ஹெய்டிரிக் அண்ட் ஸ்டிரகுள்ஸ், யாகூ நிறுவனத்துக்கு தலைமை நிர்வாக அதிகாரியை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேடி வருகிறது.
யாகூவின் தலைமை மாற்றத்தால், சீனாவில் அலிபாபா குழுமத்தில் இந்நிறுவனம் செய் துள்ள 400 கோடி ரூபாய் முதலீட்டில் எந்த மாற்றமும் வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: