Monday, November 17, 2008

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மாலை வர்த்தகம் முடிய ஒரு மணி நேரத்தில் ஓரளவு புள்ளிகளை மீட்டு விட்டது. ரியல் எஸ்டேட், மெட்டல், பேங்கிங், பார்மா மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டுதான் இருக்கின்றன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் வீழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், விப்ரோ, என்.டி.பி.சி., பெல், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்த நிலையில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 2,700 புள்ளிகளுக்கு கீழும் சென்றிருந்தது. இருந்தாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் டெலிகாம், கேப்பிடல் குட்ஸ், டெக்னாலஜி, சிமென்ட், ஆட்டோ,ஓ.என்.ஜி.சி., பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் இழந்த புள்ளிகள் ஒரளவுமீண்டு வந்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 94.41 புள்ளிகள் ( 1.01 சதவீதம் ) குறைந்து 9,291.01 புள்ளிகளில் முடிந்தது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் ( 0.38 சதவீதம் ) குறைந்து 2,799.55 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரக்ஸர், டாடா ஸ்டீல், டி.எல்.எஃப், ஹெச்.டி.எஃப்.சி, யூனிடெக், சீமென்ஸ், எம் அண்ட் எம், மற்றும் செய்ல் ஆகியவை 4 முதல் 4.7 சதவீதம் வரை இழந்திருந்தது. விப்ரோ, ஏ.சி.சி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், நால்கோ, அம்புஜா சிமென்ட்ஸ்,மற்றும் பவர் கிரிட் கார்பரேஷன் 2 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: