Friday, November 21, 2008

நிதி நெருக்கடியால் டி.எல்.எப்., திட்டங்கள் முடக்கம்

நிதி நெருக்கடியில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் டி.எல்.எப்., சிக்கித் தவிக்கிறது; சில ஊழியர்களை நீக்கிய இது, தன் கட்டுமான திட்டங்களில், சிலவற்றையும் முடக்கி வைத்துள்ளது.டி.எல்.எப்., நிறுவன தலைவர் சிங் கூறுகையில்,'நிதி நெருக்கடி காரணமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. கட்டிய கட்டடங்களை வாங்கவும் ஆளில்லாததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சில ஊழியர்களை நீக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது' என்றார்.'வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் பலமடங்கு உயர்ந்ததும் இதற்கு காரணம். அதனால் தான், பலரும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் 7க்கு மேல் போகக்
கூடாது' என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.'டி.எல்.எப்., நிறுவனம் போட்டுள்ள சில திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. நிலைமை மாறினால், மீண்டும் இந்த திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளது. 'கட்டுமான திட்டங்களில் பணம் முடக்கம் போன்றவை தொடர்ந்தால், பல பில்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு வட்டியை குறைக்க நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுமான திட்டங்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்' என்று
ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: