Friday, November 21, 2008

மீண்டும் வெளிவந்தது அமிர்தாஞ்சன் பெய்ன் பாம்

பாரம்பரியமிக்க வலி நிவாரனியான அமிர்தாஞ்சன் பெய்ன் பாம் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. சந்தையில் அதன் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அதன் பேங்கிங் மற்றப்பட்டிருப்பதாக அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட்டின் மேலாண் இயக்குனர் சாம்பு பிரசாத் தெரிவித்தார். மேலும் இதன் விற்பனையை அதிகரிக்க புதுவிதமான டி.வி. விளம்பரம் வெளியிடவும் அது திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ரூ.6 கோடியை அமிர்தாஞ்சன் செலவு செய்கிறது. தற்போது அமிர்தாஞ்சன் நிறுவனம் ஆறு வகையான மருந்துக்களை வெளியிடுகிறது. அதன் பெய்ன் பாம் மூன்று மாடல்களில் ( பெய்ன் பாம், ஸ்டிராங் பாம், மகா ஸ்டிராங் பாம் ) வெளிவருகிறது. இது தவிர டிராகன் லிக்விட், ஜாயின்ட் ஏக் கிரீம் மற்றும் மஸ்குலர் பெய்ன் ஸ்ப்ரே யையும் வெளியிடப்படுகிறது. இதில் பெய்ன் பாம் மற்றும் டிராகான் லிக்விட் ஆகியவை இந்தியா முழுவதும் கிடைத்தாலும், ஜாயின்ட் ஏக் கிரீம் மற்றும் மஸ்குலர் பெய்ன் ஸ்ப்ரே ஆகியவை குறிப்பிட்ட சில தமிழக நகரங்களிலும் ஒரிசாவிலும் மட்டுமே கிடைக்கும். விரைவில் இவைகள் மேற்கு வங்காளத்திலும் விற்பனை செய்யப்படும் என்று அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் மனோஜ் நாயர் தெரிவித்தார். இந்திய பெய்ன் பாம் சந்தையில் அமிர்தாஞ்சனுக்கு 25 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. அதில் பாதிக்கு மேல் தென் இந்தியாவில் இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: