
சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இன்று நிளவிய சாதகமான சூழ்நிலையாலும், சீன பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து காப்பாற்ற அந்நாட்டு அரசு 586 பில்லியன் டாலர்களை கொடுத்திருப்பதாலும், இந்திய பங்கு சந்தையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பயனடைந்தது மெட்டல் பங்குகள்தான். அதற்கு அடுத்ததாக பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம், ஆயில், டெக்னாலஜி பங்குகள் உயர்ந்திருந்தன.காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 571.87 புள்ளிகள் ( 5.74 சதவீதம் ) உயர்ந்து 10,536.16 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 175.25 புள்ளிகள் ( 5.87 சதவீதம் ) உயர்ந்து 3,148.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றமே காணப்பட்டது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment