Tuesday, November 11, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே போனது

கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் முன்னேறிய சென்செக்ஸ், இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி, நேற்று அடைந்த புள்ளிகளை இன்று இழந்தன. நிப்டி 2950 புள்ளிகளுக்கும் கீழும் சென்செக்ஸ் 9900 புள்ளிகளுக்கும் கீழும் போய்விட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 696.47 புள்ளிகள் ( 6.61 சதவீதம் ) குறைந்து 9,839.69 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 209.60 புள்ளிகள் ( 6.66 சதவீதம் ) குறைந்து 2938.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி.எல்.எஃப், இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,எல் அண்ட் டி, செய்ல் ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ள நிறுவனங்கள். இருந்தாலும் ஐ.டி.சி.,மற்றும் சிப்லா பங்குகள் உயர்ந்திருந்தன.செய்ல், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹின்டல்கோ பங்குகள் 10 - 18 சதவீதம் குறைந்திருந்தது. மெட்டல் இன்டக்ஸ் 8.42 சதவீதத்தை இழந்திருந்தது. உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இங்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: