Saturday, October 25, 2008

ரத்தம் சொட்டும் பங்கு சந்தை

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் நேற்று ரத்தம் சொட்டும் வகையில் எங்கு பார்த்தாலும் சிவப்பாக காணப்பட்டது. நேற்று மட்டும் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. முதலீட்டாளர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.பங்குச்சந்தையில் நிலைமை எப்போது சரியாகும் என்பது புதிராக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. நேற்று முன்தினம் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்ததால், நேற்று மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கியது.மத்திய ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதி அறிக்கையில் நல்ல அறிவிப்புகள் என்ற எதிர்பார்ப்பு தென்பட்டதால் சந்தையில் மந்தமான நிலை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளிலும் தொய்வு நிலை காணப்பட்டதால், 500 புள்ளிகள் வரை சரிந்து கொண்டிருந்தது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத வகையில் சரிவு கண்டது.அடுத்து, மத்திய ரிசர்வ் இடைக்கால நிதி அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்ற செய்தி வந்ததன் தாமதம் பலரும் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு விற்க வந்தனர். வட்டி குறைப்பு பற்றியோ, டிபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிப்பு பற்றியோ எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதால் வங்கி பங்குகள் அடி வாங்கின. இதனால் சென் செக்ஸ், 'நிப்டி' அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.வங்கித்துறை, ரியல் எஸ்டேட், ஆயில் காஸ் பங்குகளின் விலை சடசடவென சரிந்தன.
எல்லா பங்குகளும் சிவப்புமயமாக காணப்பட்டன. தங்கள் முதலீடு முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டுவது போல் நேற்று ரத்தம் வடியும் பங்குச்சந்தையாக இருந்தது.
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரையில் 53 சதவீதத்திற்கு பங்குகள் விலை குறைந்துள்ளன. கடந்த ஜனவரி 21ம் தேதி 1,408 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்தது. அதற்குப் பிறகு நேற்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. நேற்று வர்த்தகம் முடியும் போது, 'சென்செக்ஸ்' 1,071 புள்ளிகள் சரிந்து 8,701.07 என்ற நிலையில் முடிந்தது.
'நிப்டி' 359 புள்ளிகள் சரிந்து, 2,584 என்ற நிலையில் முடிந்தது. பங்குச்சந்தையை தூக்கி நிறுத்த கடந்த சில நாட்களில் தீவிரமாக செயல்பட்ட ரிசர்வ் வங்கி நேற்றை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
பெரிய கம்பெனிகளுக்கு பணப் புழக்கம் சீராக இல்லாத நிலை, உலக அளவில் ஏற்படக்கூடிய தொழில் துறை தேக்கம் ஆகியவை இங்கு எதிரொலிக்கின்றன. குறிப்பாக பரஸ்பர நிதிநிறுவனங்கள் பணமின்றி இருப்பதும், அன்னியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு தேய்வதும் பல்வேறு பிரச்னைகளாக இங்கே எதிரொலிக்கின்றன.இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக சந்தை நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், வர்த்தக அமைச்சர் கமல்நாத் இந்த வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை என்றார்.
நன்றி : தினமலர்


2 comments:

MCX Gold Silver said...

talaipa payama irukku

பாரதி said...

வருகைக்கு நன்றி