Saturday, August 30, 2008

கே.ஜி.படுகையில் காஸ் எடுப்பதில் தீவிரம் காட்டுகிறது ரிலையன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ( விற்பனையில் ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இருந்து கேஸ் எடுக்கும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரிலையன்ஸ் இன்டஸ்டிரஸின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் அக்டோபரில் இருந்து அங்கு கேஸ் எடுக்கவேண்டும் என்றும் அதற்கு தகுந்த படி வேலைகள் செய்யுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த காலத்தை விட 2 - 3 மாதங்கள் முன்னதாகவே கேஸ் எடுக்க அவர்கள் முன்வந்துள்ளார்கள். கேஸ் கிடைக்கும் கிருஷ்ணா - கோதாவரி படுகை பகுதிக்கும், அதன் சுந்திகரிப்பு நிலையம் இருக்கும் ஜாம்நகர் பகுதிக்குமிடையே போடப்பட்டு வரும் பைப்லைன் வேலையும் முடியும் தருவாயில் இருக்கிறது. உலகிலேயே அதிகம் கேஸ் இருக்கும் பகுதி என்று சொல்லப்படும் கிருஷ்ணா - கோதாவரி ஆற்று படுகையில் 11.5 டிரில்லியன் கியூபிக் அடி ( டி சி எஃப் ) கேஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இங்கு கேஸ் எடுக்கும் தொழிலில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அங்கு நாள் ஒன்றுக்கு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் கேஸ் எடுக்க திட்டமிட்டிருக்கிறது. பின்னர் அதை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் 80 மில்லியனாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மற்ற உலக நாடுகளில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களுக்குப்பின் தான் அங்கிருந்து கேஸை எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிஸ் கேஸ் உற்பத்தி நிலையமோ கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களிலேயே கேஸ் எடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: