Tuesday, August 26, 2008

கிராமங்களை தேடி செல்கிறது ஹெச்.டி.எஃப்.சி பேங்க்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான ஹெச்.டி.எஃப்.சி., கிராமங்களில் அதன் கிளைகளை அதிக அளவில் துவக்க திட்டமிட்டிருக்கிறது. இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிளைகளை வைத்திருந்த ஹெச்.டி.எஃப்.சி., வங்கி இப்போது கிராமங்களை தேடி செல்வதற்கு காரணம், அங்கிருக்கும் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களால் பெரிய அளவில் பேங்கிங் வேலைகள் நடக்கின்றன என்பதால்தான். அவர்களை தன் பக்கம் இழுக்கவே கிராமங்களில் கிளைகளை துவங்க அந்த வங்கி முன் வந்திருக்கிறது. மெட்ரோபாலிடன் நகரங்களில் இருப்பதுபோலவே கிராம கிளைகளும் கோர் பேங்கிங் வசதியால் இணைக்கப்பட்டிருக்கும் என்று ஹெச்.டி.எஃப். சி.,யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த நிதி ஆண்டில் நாங்கள் இந்தியா முழுவதும் 200 புதிய கிளைகளை திறக்க இருக்கிறோம். அதில் 100 க்கும் அதிகமான கிளைகள் கிராமப்புறங்களில் திறக்கப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி., பேங்கின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஜி.எஸ்.கோபிநாத் தெரிவித்தார். கிராமப்புறங்களில் நாங்கள் கிளைகள் துவங்குவதன் முக்கிய நோக்கமே அங்குள்ள விவசாயிகளையும், சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களையும் வங்கிகளை பயண்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார் அவர். இப்போது தென் இந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் 325 கிளைகளில் 125 கிளைகள், கிராமப்புறங்களிலும் செமி அர்பன் ஏரியாவிலும் இருக்கிறது.
நன்றி :தினமலர்


No comments: