Tuesday, August 26, 2008

ரூ.3,300 கோடிக்கு பிரிட்டன் கம்பெனியை வாங்குகிறது இன்ஃபோசிஸ்

பெங்களுருவை சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,300 கோடி ரொக்கமாக கொடுத்து பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸான் குரூப்பை வாங்குகிறது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் எடுத்துள்ள மூன்றாவது மிகப்பெரிய விரிவாக்க முயற்சி இது. ஜூன் 30,2008ம் தேதியுடன் முடிந்த காலத்தில் இன்ஃபோசிஸிடம் ரூ.7,500 கோடி உதிரி பணம் கையிருப்பு இருந்ததால் ஆக்ஸான் நிறுவனத்தை பணமாக கொடுத்து வாங்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிறுவனம் நவம்பரில் வாங்கப்பட்டு விடும் என்கிறார்கள். அவ்வாறு வாங்கி விட்டால் இந்திய ஐ.டி.கம்பெனி ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கும் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனமாக இதுவாகத்தான் இருக்கும். கடந்த வருடத்தில் விப்ரோ நிறுவனம், அமெரிக்க நிறுவனமான இன்ஃப்ரோ கிராஸிங்தை ரூ.2,400 கோடிக்கு வாங்கியிருந்தது. அதுதான் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நிறுவனமாக சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய நிறுவனமான எக்ஸ்பர்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 23 மில்லியன் டாலருக்கும், 2007ம் ஆண்டு பிலிப்ஸ் குலோபல் பிபிஓ நிறுவனத்தை 250 மில்லியன் டாலருக்கும் வாங்கியிருந்தது.

நன்றி :தினமலர்



No comments: