Friday, August 29, 2008

ஐ சி ஐ சி ஐ வங்கி துணை தலைவர் ராஜினாமா ; ஜேபி மார்கனின் சேர்ந்தார்

ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் இன்சூரன்ஸ் பிரிவு துணைதலைவராக பணியாற்றிய கல்பனா மோர்பாரியா, அதிலிருந்து விலகி விட்டார். அவர் ஜேபி மார்கன் நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கியில் கல்பனா மோர்பாரியா கடந்த 33 வருடமாக பணியாற்றியவர். அங்கு அவர், இன்சூரன்ஸ், செக்யூரிட்டீஸ் மற்றும் அசட் மேனெஜ்மென்ட் துறையில் தலைவராக பணியாற்றி வந்தார். 1975ம் வருடம் ஐ சி ஐ சி ஐ வங்கியில் சேர்ந்த கல்பனா, 2001 ம் ஆண்டு இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றார். 2007 மே மாதம் வரை அதின் இணை மேலாண் இயக்குனராக இருந்தார். 2007 ஜூனில் இயக்குனர் குழுவில் இருந்து விலகினார். பின்னர் அவர் அந்த வங்கியின் இன்சூரன்ஸ் மற்றும் அசட் மேனேஜ்மென்ட் பிரிவின் துணை தலைவராக பணியாற்றினார். இப்போது அதிலிருந்து விலகிய கல்பனா, ஜேபி மார்கன் என்ற நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
நன்றி : தினமலர்

2 comments:

பரிசல்காரன் said...

ஐ! தலைப்பை மாத்துங்க!

பாரதி said...

பரிசல்காரன் வருகைக்கு நன்றி

திருத்தும் செய்துவிடேன்