Wednesday, August 13, 2008

பெட்ரோல் விலையை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை : முரளி தியோரா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113 டாலராக குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147 டாலருக்கும் மேல் இருந்த கச்சா எண்ணெய் விலை, நேற்று 113 டாலர்தான். இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டபோது, இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் கூட, இந்தியாவில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, மார்க்கெட் விலையை விட குறைவாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு மேலும் விலையை குறைக்க முடியாது என்றார். மேலும் இந்தியாவில் டீசலின் தேவை, எதிர்பார்த்ததை விட 23 - 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எனவேதான் சில இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தினமலர்

No comments: