Friday, August 1, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : நிப்டி 4400 புள்ளிகளுக்கு மேல் சென்றது


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 322.88 புள்ளிகள் குறைந்து போய், பகல் 12.30 வரை சரிவு நிலையிலேயே இருந்தது. பின்னர்தான் லேசாக முன்னேறி வந்தது. பின்னர் வேகமாக உயரத்துவங்கிய சென்செக்ஸ் மாலை வர்த்தக முடிவில் 300.94 புள்ளிகள் ( 2.10 சதவீதம் ) உயர்ந்து 14,656.69 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.86 சதவீதம் ) உயர்ந்து 4,413.55 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவது அதிகமாக இருந்தது. கேப்பிட்டல் குட்ஸ், பவர், ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், மெட்டல், ரியால்டி மற்றும் டெக்னாலஜி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தக முடிவில் நிப்டி 4,400 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14,650 புள்ளிகளுக்கு மேலும் சென்றது வர்த்தகர்களிடையே புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. காலை வர்த்தக ஆரம்பத்தில் சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நிலவிய மந்த நிலை காரணமாக டல் ஆக இருந்த பங்கு சந்தையில் அதன் பின் வேகமாக பங்குகள் வாங்கப்பட்டதால் ( குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் ) சென்செக்ஸ் வேகமாக உயர துவங்கி விட்டது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 8.67 சதவீதம், பி.என்.பி.7.07 சதவீதம், சுஸ்லான் எனர்ஜி 7.04 சதவீதம், எஸ்.பி.ஐ.6.05 சதவீதம், ஹெச்.டி.எஃப்.சி. 5.51 சதவீதம், சீமன்ஸ் 5.02 சதவீதம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா 4.71 சதவீதம் மற்றும் பெல் 4.61 சதவீதம் உயர்ந்திருந்தது. இருந்தாலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - 12.65 சதவீதம், டாடா பவர் - 3.76 சதவீதம், மாருதி சுசுகி - 2.50 சதவீதம், டாடா மோட்டார்ஸ் - 2.04 சதவீதம், ஹெச் யு எல் - 1.90 சதவீதம் மற்றும் ஏ.சி.சி. - 1.33 சதவீதம் குறைந்திருந்தது

No comments: