Friday, August 1, 2008

ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்தியது


தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகியவை கட்டணத்தை உயர்த்தி இருப்பதை அடுத்து ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்துகிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று சொன்ன ஏர் - இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் விமானங்கள் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை 2.8 சதவீதம் உயர்த்தி விட்டது. இதையடுத்து தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், டெக்கான் மற்றும் ஜெட் ஏர்வேஸ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து விட்டது. நாங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து விட்டோம் என்று ஏர் - இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பையில் தெரிவித்தார். ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் மற்றும் டெக்கான் வெள்ளிக்கிழமையில் இருந்து கட்டணத்தை உயர்த்துகின்றன. கிங்ஃபிஷரும் டெக்கானும் அதன் எல்லா கிளாஸ்களிலும் 10 சதவீத கட்டணத்தை உயர்த்துகிறது. ஜெட் ஏர்வேஸ், எக்கனாமி கிளாசில் 10 சதவீதமும் பிசினஸ் கிளாசில் 5 சதவீதமும் உள்நாட்டு சர்வீசில் மட்டும் உயர்த்துகிறது.

நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

இறங்கிவந்த கச்சா எண்ணெய் மீண்டும் ஏற ஆரம்பித்துவிட்டதே.

200 டாலராகுமோ!


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

அப்படி தோன்றவில்லை