Thursday, July 17, 2008

கச்சா எண்ணெய் விலை திடீர் குறைவு ஏன்?


சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை நேற்று திடீரெனக் குறைந்தது. நேற்று முன்தினம் இருந்த விலையை ஒப்பிடும் போது, சந்தையில் பேரல் ஒன்றுக்கு 10 டாலர் வரை விலை குறைந்தது. கடைசியில், நியூயார்க் சந்தையில் பேரல் ஒன்றுக்கு 138.74 டாலராக விலை போனது.
இனி, எப்போது பேரல் விலை 160 டாலராகும் என்று உலக நாடுகள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த திடீர் சரிவு அனைவரையும் அதிரவைத்தது. ஆசிய அளவில் எரிசக்தி தகவல் தொடர்பு நிபுணர் இது குறித்து கருத்து கூறும் போது, 'நான் அதிர்ந்து போனேன்' என்றிருக்கிறார். இதற்குக் காரணம் அமெரிக்க பெடரல் வங்கித் தலைவர் பென் பெர்னாகே நேற்று கூறுகையில், 'அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமற்ற தன்மையில் இருக்கிறது' என்று கூறியதின் விளைவேயாகும். அதிகளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் அமெரிக்காவில், பொருளாதாரம் சரியாக இல்லை என்றால் தேவை குறைந்து விடும் என்ற அச்சமே சரிவை ஏற்படுத் தியது என்று தெரிவித்தார். அதே சமயம் அமெரிக்க அதிபர் புஷ், வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில், 'அமெரிக்க கடல்பகுதியில் எண்ணெய் துரப்பன பணியை மேற்கொள்ளலாம். ஆனால், கச்சா எண்ணெய் உடனே கிடைக்காது. எரிபொருள் விலையைக் குறைக்க உடனடி நிவாரணம் கிடையாது. அதே போல், நாம் வைத்திருக்கும் அவசரத் தேவை கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்தலாம் என்பதும் சரியல்ல' என்றார். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமைப்பினர், இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதே, அடுத்த சில வாரங்களில் பேரல் 160 டாலரை தொட்டு விடும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


No comments: