சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.
இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.
இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.
நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.
தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?
சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.
தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.
இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.
ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.
எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : வி.குமாரமுருகன்
நன்றி : தினமணி
Friday, January 15, 2010
தொடரும் இனவெறித் தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடந்து வரும் இனவெறித் தாக்குதல் கவலை அளிக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் இந்தியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள் மற்றொரு இந்தியர் மீது மர்மக் கும்பல் ஆசிட் வீச்சு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளது.
மெல்பர்ன் நகரின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்ப்ரீத் சிங். இந்தியரான இவர், தனது மனைவியுடன் ஒரு விருந்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு, காரை பக்கத்துத் தெருவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தபோது மர்மக் கும்பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி, தீவைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டது.
இப்படி இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடக்கின்ற போதிலும் இதை ஆஸ்திரேலிய அரசு தீவிரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலை இனவெறித் தாக்குதல் என்று சொல்லமுடியாவிட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தியர்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்த்தால் இது இனவெறி ஆதிக்கச் செயலே என்பது தெரியவரும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் சாதாரண குற்றச் சம்பவங்கள்தான் என்பது போல் ஆஸ்திரேலியத் தூதர் தாமஸ் வர்கீஸ் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது புரியும்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஆசியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் அங்கு படித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், ஆசியர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பகுதிநேர ஊழியர்களாக வேலைசெய்து தங்கள் செலவினங்களைச் சமாளித்து வருகின்றனர். குறிப்பாக மெல்பர்ன் நகரில் இந்தியர்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே செல்கின்றனர். தனியாகச் செல்வதில்லை. மேலும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் எதையும் அவர்கள் கையிலெடுத்துச் செல்வதில்லை. இந்நிலையில் இதுபோன்று நடத்தப்படும் தாக்குதலை வழிப்பறி என்ற சாதாரண குற்றமாக யாரும் சொல்லிவிட முடியாது.
இந்தியர்கள் மீது குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை ஆஸ்திரேலிய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறுவதற்குப் பதிலாக உலகம் எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன் தில்லி, மும்பை போன்ற நகரங்களிலும் இவை நடக்கத்தான் செய்கின்றன. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இத்தகைய சம்பவங்கள் தற்செயலாக நடந்திருந்தாலும் சரி...இனவெறித் தாக்குதலாக இருந்தாலும் சரி... வெளிநாட்டினரை, குறிப்பாக இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது.
இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்ட மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்றும் யோசனை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வுகாண முன்வராமல், மாணவர்களை அங்கு சென்று படிக்க வேண்டாம் என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்புக் கல்வி நன்றாக இருப்பதால்தான் அங்கு சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் திறமையுள்ள மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடாத மாணவர்கள்தான் அங்கு செல்கின்றனர். எங்கு சென்று படிக்க வேண்டும், என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மாணவரும் அவருடைய பெற்றோரும் தான். கல்வி ஆலோசகர்களாகச் செயல்படும் சிலருடைய தவறான வழிகாட்டுதல்களாலே தவறுகள் ஏற்படுகின்றன. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குச் சில எச்சரிக்கைகளை அமைச்சர் தெரிவிக்கலாமே தவிர அவர்களை இங்கு படிக்காதே, அங்கு படிக்காதே என்று தீர்ப்புச் சொல்லக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களின் திறமையான படிப்பின் மூலமும், செயல்பாட்டின் மூலமும் அந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தருகின்றனர்.
இதை ஆஸ்திரேலிய அரசு உணர்ந்துகொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நில்லாமல், இந்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற இனவெறித் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னிய நாட்டில் இந்தியர்களின் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோவதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆஸ்திரேலிய அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது. அதை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராகவன்
நன்றி : தினமணி
கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் இந்தியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள் மற்றொரு இந்தியர் மீது மர்மக் கும்பல் ஆசிட் வீச்சு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளது.
மெல்பர்ன் நகரின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்ப்ரீத் சிங். இந்தியரான இவர், தனது மனைவியுடன் ஒரு விருந்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு, காரை பக்கத்துத் தெருவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தபோது மர்மக் கும்பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி, தீவைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டது.
இப்படி இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடக்கின்ற போதிலும் இதை ஆஸ்திரேலிய அரசு தீவிரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலை இனவெறித் தாக்குதல் என்று சொல்லமுடியாவிட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தியர்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்த்தால் இது இனவெறி ஆதிக்கச் செயலே என்பது தெரியவரும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் சாதாரண குற்றச் சம்பவங்கள்தான் என்பது போல் ஆஸ்திரேலியத் தூதர் தாமஸ் வர்கீஸ் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது புரியும்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஆசியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் அங்கு படித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், ஆசியர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பகுதிநேர ஊழியர்களாக வேலைசெய்து தங்கள் செலவினங்களைச் சமாளித்து வருகின்றனர். குறிப்பாக மெல்பர்ன் நகரில் இந்தியர்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே செல்கின்றனர். தனியாகச் செல்வதில்லை. மேலும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் எதையும் அவர்கள் கையிலெடுத்துச் செல்வதில்லை. இந்நிலையில் இதுபோன்று நடத்தப்படும் தாக்குதலை வழிப்பறி என்ற சாதாரண குற்றமாக யாரும் சொல்லிவிட முடியாது.
இந்தியர்கள் மீது குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை ஆஸ்திரேலிய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறுவதற்குப் பதிலாக உலகம் எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன் தில்லி, மும்பை போன்ற நகரங்களிலும் இவை நடக்கத்தான் செய்கின்றன. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இத்தகைய சம்பவங்கள் தற்செயலாக நடந்திருந்தாலும் சரி...இனவெறித் தாக்குதலாக இருந்தாலும் சரி... வெளிநாட்டினரை, குறிப்பாக இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது.
இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்ட மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்றும் யோசனை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வுகாண முன்வராமல், மாணவர்களை அங்கு சென்று படிக்க வேண்டாம் என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்புக் கல்வி நன்றாக இருப்பதால்தான் அங்கு சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் திறமையுள்ள மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடாத மாணவர்கள்தான் அங்கு செல்கின்றனர். எங்கு சென்று படிக்க வேண்டும், என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மாணவரும் அவருடைய பெற்றோரும் தான். கல்வி ஆலோசகர்களாகச் செயல்படும் சிலருடைய தவறான வழிகாட்டுதல்களாலே தவறுகள் ஏற்படுகின்றன. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குச் சில எச்சரிக்கைகளை அமைச்சர் தெரிவிக்கலாமே தவிர அவர்களை இங்கு படிக்காதே, அங்கு படிக்காதே என்று தீர்ப்புச் சொல்லக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களின் திறமையான படிப்பின் மூலமும், செயல்பாட்டின் மூலமும் அந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தருகின்றனர்.
இதை ஆஸ்திரேலிய அரசு உணர்ந்துகொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நில்லாமல், இந்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற இனவெறித் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னிய நாட்டில் இந்தியர்களின் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோவதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆஸ்திரேலிய அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது. அதை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராகவன்
நன்றி : தினமணி
Labels:
கடன்,
கட்டுரை,
கல்வி,
மத்தியஅரசு,
மனிதநேயம்,
மாணவர்
தகுதியற்றதா, தேவையற்றதா?
தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் அண்ணா கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது போன்ற தகுதியற்ற செலவுகளுக்காகத் திருப்பிவிட்டதாகக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறியிருக்கிறது.
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
நன்றி : தினமணி
தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.
இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.
பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.
எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.
நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
நன்றி : தினமணி
Labels:
தமிழகஅரசு,
தலையங்கம்,
தொலைக்காட்சி
Thursday, January 14, 2010
செல்' இன்றிச் செல்!
பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.
÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.
÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.
÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.
÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.
÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.
÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.
÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி
÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.
÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.
÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.
÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.
÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.
÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.
÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி
கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்
ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது, அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி, மனதை ரணமாக்கி, பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம், அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை. ஒரு மனிதர், ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன. தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள், படை, வாகனங்களுடன் நிற்கிறார்கள். ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர், அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்- ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல! எதற்காக இந்தக் கொலை? அவர் சொல்ல வரும் விஷயம் என்ன? அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை, அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை. (சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே இராமன், இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)
அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர, பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை? வலது கால் துண்டான நிலையில், ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும், எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி, முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும். அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்? கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே! அல்லது, காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா? எதற்காகக் கடைசிவரை காத்திருந்து, 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும், பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம். இத்தகைய ஒரு பதிலை, சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா? 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை. ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கட்டளையிட்டால், செயல்பட ஆள், படை, வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது. ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..
காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர், ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது, "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ், அவர்களைக் கடுமையாகத் திட்டி, விரட்டி அடித்தார். அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல. மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.
ஆனால், சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால், அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும். ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி. சானல்களில் ஒளிப்பரப்பாகின. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி. சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும், எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின. அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், இதைக் காண நேர்ந்த பொதுமக்கள், சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை, பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது. ஓர் உயிரின் துடிப்பு, பலரையும் துடிதுடிக்க வைத்தது.
அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை- தனியார் டி.வி. சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
நன்றி : தினமணி
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை. ஒரு மனிதர், ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன. தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள், படை, வாகனங்களுடன் நிற்கிறார்கள். ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர், அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்- ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல! எதற்காக இந்தக் கொலை? அவர் சொல்ல வரும் விஷயம் என்ன? அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை, அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை. (சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே இராமன், இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)
அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர, பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை? வலது கால் துண்டான நிலையில், ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும், எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி, முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும். அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்? கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே! அல்லது, காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா? எதற்காகக் கடைசிவரை காத்திருந்து, 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும், பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம். இத்தகைய ஒரு பதிலை, சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா? 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை. ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கட்டளையிட்டால், செயல்பட ஆள், படை, வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது. ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..
காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர், ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது, "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ், அவர்களைக் கடுமையாகத் திட்டி, விரட்டி அடித்தார். அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல. மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.
ஆனால், சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால், அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும். ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி. சானல்களில் ஒளிப்பரப்பாகின. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி. சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும், எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின. அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், இதைக் காண நேர்ந்த பொதுமக்கள், சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை, பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது. ஓர் உயிரின் துடிப்பு, பலரையும் துடிதுடிக்க வைத்தது.
அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை- தனியார் டி.வி. சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
நன்றி : தினமணி
'பால் விலையை உயர்த்தாவிட்டால் மீண்டும் போராட்டம்'
''பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்,'' என தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறினார்.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம், தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்கிறது. தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் உள்ளனர். தினமும் 48 லட்சம் லிட்டர் முதல் 50 லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், அதைச் சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர். அன்றாடம் மாடுகளுக்கு தேவையான தீவனம், பருத்திக் கொட்டை, தவிடு போன்ற அனைத்து பொருட்களும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், பால் உற்பத்தி செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு 29 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், பாலுக்கான கொள்முதல் விலை, குறைவாக உள்ளதால், கறவை மாடுகள் வளர்ப்பதை விவசாயிகள் கைவிடும் நிலையில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் அம்மாநிலங்களில் பால் வளத்தை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், தமிழக அரசு பால் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆவின் நிறுவனத்தில் நடக்கும் குளறுபடியால், பெரும்பாலான கொள்முதல் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: அரசு செப்டம்பர் மாதம் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. இதன்படி, எருமை பால் ஒரு லிட்டருக்கு 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்தியது. பசும்பால் ஒரு லிட்டருக்கு 13.64 ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் மட்டும் அதிகரித்து 15.64 ரூபாயாக அறிவித்துள்ளது. பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், பால் கொள்முதல் விலை தவிர, ஊழியர்கள் பணிநிரந்தரம் குறித்து பேசினோம். பத்து நாளில் செய்வதாக கூறப்பட்டது. இரண்டரை ஆண்டாக பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா அரசுகள், பால் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில்லை. கூட்டுறவு ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பாக்கி வைக்கப்படுகிறது. தர்மபுரியில் இரண்டு மாதமும், விழுப்புரத்தில் 40 நாட்களுக்கும், பணம் வழங்காமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கறவை மாடுகளை கணக்கு பார்க்காமல் வளர்க்கின்றனர். முறையாக கணக்கு பார்த்தால், லிட்டருக்கு 29 ரூபாய் வரை வழங்க வேண்டும். விலை உயர்த்துவதாக கூறி நான்கு மாதங்களான போதும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
நன்றி : தினமலர்
ரூ.1,900க்கு கம்ப்யூட்டர் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
கிராம மக்களுக்கு தவணை முறையில்,1900 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., துவக்கி உள்ளது. பி.எஸ்.என்.எல்., சேவை பற்றி தெரிந்து கொள்ளவும், சலுகை விலையில் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கி ஏராளமான திட்டங்கள் பற்றி அறியவும் சிவகாசியில் இரண்டு நாட்கள் 'மெகா மேளா' நடத்தப்பட்டது.கிராம எக்ஸ்சேஞ்சுகள் மூலம் நோவாநெட் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. பராமரிப்பு தேவையில்லை, இரண்டாண்டு உத்தரவாதம், சிக்கலற்ற மல்டி மீடியா, வைரசிலிருந்து முழுமையான பாதுகாப்பு, வாழ்நாள் முழுவதற்கும் மென்பொருள் உத்தரவாதம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மானிட்டர், கீபோர்டு, மவுஸ் வாடிக்கையாளரிடம் இருக்கும். மெமரி கன்ட்ரோல் பி.எஸ்.என்.எல்., வசம் இருக்கும். ஐந்து ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இதன் விலை 1,900 ரூபாய். மாதாந்திர கட்டணங்கள் ரூ.274, ரூ.325 க்கு உள்ளன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு 2,550 ரூபாய் செலுத்தி புதிய கம்ப்யூட்டர் பெறலாம். மாதம் ரூ.300 வீதம், 60 மாதங்களுக்கும், ரூ.455 வீதம் 36 மாதங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கிராமப்புற டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
Subscribe to:
Posts (Atom)
