Saturday, December 19, 2009

காங்​கி​ரசுக்கு சோதனை "தெலங்​கானா'

ஆந்​திர மாநில முதல்​வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்​குப் பிறகு அதி​கா​ரத்​தைக் கைப்​பற்​று​வது யார் என்​பது தொடர்​பான சர்ச்சை எழுந்து முதல்​வ​ராக ரோசய்யா தொடர்​வார் என அறி​விக்​கப்​பட்டு பிரச்னை ஓய்ந்​தி​ருந்த நிலை​யில்,​​ அங்கு "தனி தெலங்​கானா' விவ​கா​ரம் விஸ்​வ​ரூ​பம் எடுத்​துள்​ளது.​

÷1950}களின் தொடக்​கத்​தில் முதன்​மு​த​லாக நிலப்​பி​ர​புக்​க​ளுக்கு எதி​ராக மிகப்​பெ​ரிய விவ​சா​யி​கள் இயக்​கம் உரு​வா​னது.​ பின்​னர் தனி மாநி​லக் கோரிக்கை எழுந்​தது.​ அதன் பிறகு கடந்த 10 ஆண்​டு​க​ளில் அக்​கோ​ரிக்கை புதிய உத்​வே​கம் பெற்​றது.​

இந்​தக் காலத்​தில்​தான் மாநி​லங்​கள் மறு​சீ​ர​மைப்​புக் கமி​ஷன் கோரிக்கை வலுப்​பெ​றவே பிர​ணாப் முகர்ஜி தலை​மை​யி​லான கமிட்டி தனது அறிக்​கையை எல்.கே.அத்​வா​னி​யி​டம் அளித்​தது.​ அப்​போது மத்​திய உள்​துறை அமைச்​சர்,​​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்க முடி​யாது என்று கூறி நிரா​க​ரித்​து​விட்​டார்.​

காங்​கி​ரஸ் மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் தனி தெலங்​கானா கோரிக்கை பரிசீ​லிக்​கப்​ப​டும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்த​லின்​போது காங்​கி​ரஸ் கட்சி தனது தேர்​தல் வாக்​கு​று​தி​யில் தெரி​வித்​தி​ருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லின்​போ​தும் இதை காங்​கி​ரஸ் முன்​வைத்​துப் பிர​சா​ரம் செய்​தது.​ செகந்​த​ரா​பா​தில் நடந்த கூட்​டத்​தில் பேசிய காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்​தி​யும்,​​ "தனி தெலங்​கானா' கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​றுக் கொள்​வ​தா​கக் கூறி​னார்.​

÷எ​னி​னும் தனி தெலங்​கானா கோரிக்கை மீண்​டும் எழா​மல் பார்த்​துக் கொள்​வ​தாக முதல்​வர் ராஜ​சே​கர ரெட்டி காங்​கி​ரஸ் தலை​மைக்கு உறு​தி​ய​ளித்​த​து​டன் மிக​வும் சாமர்த்​தி​ய​மா​கச் செயல்​பட்டு இப்​பி​ரச்னை தலை​தூக்​கா​மல் பார்த்​துக் கொண்​டார்.​ தெலங்​கானா பிரச்னை குறித்து விவா​திக்க ரோசய்யா தலை​மை​யில் ஒரு கமிட்​டி​யை​யும் ஏற்​ப​டுத்​தி​னார்.​ தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்த சில​ருக்கு அமைச்​சர் பத​வி​யும் கொடுத்​தார்.​ இதை​ய​டுத்து பிரச்னை அமுங்​கிப் போய் இருந்​தது.​

மேலும் அர​சிய​லில் அதி​ருஷ்​டம் ராஜ​சே​கர ரெட்டி பக்​கம் இருந்​தது போலும்!​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எதிர்​பார்த்த அளவு வெற்றி பெற​வில்லை.​ இது ராஜ​சே​கர ரெட்​டிக்​குச் சாத​க​மாக இருந்​த​தால் தெலங்​கானா பிரச்னை தலை​தூக்​க​வில்லை.​

​ 2004}ல் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி வைத்​தி​ருந்த தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி,​​ தெலங்​கானா விவ​கா​ரத்தை காங்​கி​ரஸ் கண்​டு​கொள்​ளா​த​தால் 2006}ல் அத​னு​ட​னான உறவை முறித்​துக் கொண்​டது.​ இதைத் தொடர்ந்து தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எம்.பி.க்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் பத​வி​களை ராஜி​நாமா செய்​த​னர்.​ ஆனால்,​​ அதைத் தொடர்ந்து நடந்த இடைத்​தேர்த​லி​லும் அக்​கட்சி தோல்​வி​யையே சந்​தித்​தது.​ 2009}ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்த​லில் 17 மக்​க​ள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி 2 இடங்​க​ளில் மட்​டுமே வென்​றது.​ இதே​போல மாநி​லச் சட்​டப்​பே​ர​வைக்​கான தேர்த​லில் தெலங்​கானா பகு​தி​யில் 119 தொகு​தி​க​ளில் போட்​டி​யிட்டு வெறும் 10 தொகு​தி​க​ளையே அக் கட்சி கைப்​பற்​றி​யது.​

இத​னால் தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு மக்​க​ளி​டையே ஆத​ரவு இல்லை என்று சொல்​லி​விட முடி​யாது.​ தெலங்​கானா பகு​தி​யில் ரெட்​டி​கள்,​​ கம்​ம​வார் இன மக்​க​ளின் கை ஓங்​கி​யி​ருந்​தது.​ இத​னால் தனி தெலங்​கானா கோரிக்கை தேர்த​லின்​போது முக்​கி​யத்​து​வம் பெற​வில்லை.​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தோல்வி ஏற்​பட்​டதை அடுத்து ஹைத​ரா​பாத் நக​ராட்​சித் தேர்த​லில் போட்​டி​யி​டத் துணி​வில்​லாத நிலை​யில் கட்​சி​யையே கலைத்​து​வி​ட​லாமா என்ற யோச​ன​யில் இருந்​தார் அதன் நிறு​வ​ன​ரான கே.சந்​தி​ர​சே​கர ராவ்.​

ஆந்​திர மாநி​லத்​தில் ராஜ​சே​கர ரெட்டி மறை​வுக்​குப் பிறகு முதல்​வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலை​யில்,​​ அவ​ரது மகன் ஜெகன்​மோ​கன் ரெட்டி,​​ தனக்​குத்​தான் முதல்​வர் பதவி வேண்​டும் என்று பிடி​வா​தம் பிடித்த நிலை​யில் தாற்​கா​லிக முதல்​வ​ராக ரோசய்யா பொறுப்​பேற்​றார்.​ இதற்கு ஜெகன்​மோ​கன் ரெட்டி கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​தார்.​ இத​னால் ஆந்​திர அர​சிய​லில் திடீர் குழப்​பம் ஏற்​பட்​டது.​ நிலைமை விப​ரீ​த​மா​வதை உணர்ந்த காங்​கி​ரஸ் தலைமை ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யைச் சமா​தா​னப்​ப​டுத்தி ரோசய்யா முதல்​வ​ரா​கத் தொடர்ந்து நீடிப்​பார் என்று அறி​வித்​தது.​

இதே​ச​ம​யத்​தில் கர்​நா​டக மாநி​லம் பெல்​லா​ரி​யில் சுரங்​கத் தொழி​லில் ஈடு​பட்​டு​வந்த ரெட்டி சகோ​த​ரர்​கள் மீது சட்​ட​வி​ரோ​த​மா​கச் செயல்​பட்டு வந்​த​தான குற்​றச்​சாட்​டின் பேரில் சிபிஐ விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​த​ர​விட்​டது.​

​ பெல்​லாரி ரெட்டி சகோ​த​ரர்​கள் ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​த​னர்.​ அவ​ரது மறை​வுக்​குப் பிறகு அந்த நெருக்​கம் ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யு​ட​னும் தொடர்ந்​தது.​ மேற்​கு​றிப்​பிட்ட இரண்டு சம்​ப​வங்​க​ளும் ஒன்​று​டன்​ஒன்று தொடர்பு இல்​லா​தது என்ற போதி​லும் இந்த நேரத்​தைப் பயன்​ப​டுத்தி தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி தலை​வர் கே.​ சந்​தி​ர​சே​கர ராவ்,​​ தெலங்​கானா பிரச்​னையை கையி​லெ​டுத்து அதற்​காக உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அறி​வித்​தார்.​ ஆனால்,​​ தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு சிலர் எதிர்ப்​புத் தெரி​வித்​த​னர்.​ இத​னால் பிரச்னை விஸ்​வ​ரூ​பம் எடுத்​தது.​ ரோசய்​யா​வின் ஆட்​சிக்​குக் கெட்ட பெயரை ஏற்​ப​டுத்​த​வும்,​​ அவரை ஆட்​சியி​லி​ருந்து கீழே இறக்​க​வும் ஜெகன் மோகன் ஆத​ர​வா​ளர்​களே பிரச்​னை​யைப் பெரி​தாக்க நினைத்து இரு​த​ரப்​பி​ன​ரை​யும் உசுப்​பி​விட்​டி​ருக்​க​லாம் என்ற கருத்து உள்​ளது.​

ஜெகன்​மோ​கன் ரெட்​டியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று கையெ​ழுத்து இயக்​கம் நடத்​தி​ய​வர்​களே தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கைக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பத​வியை ராஜி​நாமா செய்ய முன்​வந்​துள்​ள​னர்.​ இதைத் தொடர்ந்து கட​லோர ஆந்​தி​ரப் பிர​தே​சம் மற்​றும் ராய​ல​சீ​மை​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.க்க​ளும்,​​ வேறு சில பகு​தி​க​ளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்க​ளும் பத​வியை ராஜி​நாமா செய்​யத் தயார் என அறி​வித்​துள்​ள​னர்.​

​ ​ தெலங்​கானா பிரச்​னை​யைச் சரி​வர கையாள மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான ஆளும் கட்சி தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​றுக் கொள்​வ​தாக அறி​வித்த அரசு,​​ அத​னால் ஏற்​ப​டக்​கூ​டிய பின்​வி​ளை​வு​களை நினைத்​துப் பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ இந்த அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே அதற்கு எதிர்ப்​புக் கிளம்​பி​யது.​ தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்தி சாகும்​வரை உண்​ணா​வி​ர​தம் இருந்த டி.ஆர்.எஸ்.​ கட்​சித் தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவை சமா​தா​னப்​ப​டுத்​தவே இந்த அறி​விப்பு என்று காங்​கி​ரஸ் சொல்​வதை ஏற்க முடி​யாது.​ ​ சந்​தி​ர​சே​கர ராவ் உண்​ணா​வி​ர​தம் இருந்​த​போதே தெலங்​கானா பற்றி முடிவு எடுப்​ப​தற்​கான முன்​மு​யற்​சி​யில் காங்​கி​ரஸ் இறங்​கி​யது.​ உட​ன​டி​யாக அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யு​மாறு ஆந்​திர முதல்​வ​ரைக் கேட்​டுக் கொண்​டது.​ மார்க்​சிஸ்ட் மற்​றும் எம்​ஐ​எம் கட்​சி​கள் தவிர மற்ற கட்​சி​கள் தெலங்​கானா கோரிக்​கையை ஆத​ரிக்க முன்​வந்​தன.​ இது தொடர்​பாக காங்​கி​ரஸ் கட்சி மாநி​லச் ​ சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தின.​ ​(ஆனால்,​​ இரண்டு நாள்​க​ளுக்​குப் பிறகு இப் பிரச்னை தலை​கீ​ழாக மாறி​விட்​டது வேறு விஷ​யம்.)​

தெலங்​கானா மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அறி​வித்த உட​னேயே உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொள்ள வேண்​டும் என்று சந்​தி​ர​சே​கர ராவை காங்​கி​ரஸ் வலி​யு​றுத்​தி​ய​தா​கத் தெரி​கி​றது.​ அதே​ச​ம​யத்​தில் தனி தெலங்​கானா மாநி​லம் அமைந்​தால் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமி​தியை காங்​கி​ர​ஸý​டன் இணைக்க ராவ் உறுதி தெரி​வித்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​

​ தெலங்​கானா விவ​கா​ரத்​தில் ஜெகன்​மோ​கன் ரெட்டி மற்​றும் அவ​ரது ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்​புத் தெரி​விப்​பார்​கள் என்று காங்​கி​ரஸ் சற்​றும் எதிர்​பார்க்​க​வில்லை.​ ரோசய்​யா​தான் முதல்​வ​ராக நீடிப்​பார் என்று காங்​கி​ரஸ் மேலி​டம் அறி​வித்​த​போது,​​ ​ ​ ஜெகன்​மோ​கன் ரெட்டி வெளிப்​ப​டை​யாக ஒப்​புக்​கொண்​டா​லும் மன​த​ள​வில் அதை ஏற்​றுக்​கொள்​ளத் தயா​ராக இல்லை.​ இந்​தச் சம​யத்​தில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை விஸ்​வ​ரூ​பம் எடுத்​த​போது அதற்கு ரெட்டி ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்பை வெளிப்​ப​டுத்​தி​னர்.​

​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அவ​ச​ரப்​பட்டு அறி​வித்த மத்​திய அரசு,​​ இதே​போன்ற கோரிக்கை நாட்​டின் இதர பகு​தி​களி​லி​ருந்து வரும் என்​பதை எண்​ணிப்​பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா பற்​றிய அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே கோர்க்கா ஜன​முக்தி மோர்ச்சா,​​ கோர்க்​கா​லாந்து தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்​பி​யது.​ இதைத் தொடர்ந்து உ.பி.​ முதல்​வர் மாயா​வ​தி​யும்,​​ உ.பி.​ மாநி​லத்தை மூன்​றா​கப் பிரிக்க வேண்​டும் என்று கோரிக்கை எழுப்​பி​னார்.​

÷தனி தெலங்​கானா மாநி​லம் அமை​வதை அரசு கொள்கை அள​வில் ஏற்​ற​தை​ய​டுத்து நாட்​டின் இதர பகு​தி​யில் உள்​ள​வர்​கள் தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்ப வேண்​டாம் என்று மத்​திய அமைச்​சர் பிர​ணாப் முகர்ஜி தெரி​வித்​துள்​ளார்.​ ஆனால்,​​ அர​சின் அறி​விப்பு வெளி​யான விதம் தவ​றான சமிக்​ஞையை ஏற்​ப​டுத்​தும் அபா​யம் உள்​ளது.​

அதா​வது ஆந்​தி​ரத்​தில் தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்​திப் போராட்​டம்,​​ வன்​முறை நடந்​ததை அடுத்து நிலை​மை​யைச் சமா​ளிக்க அரசு தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​ப​தாக அறி​வித்​துள்​ளது.​ இனி வன்​முறை,​​ போராட்​டம் போன்​ற​வற்​றின் மூலம் கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தி​னால் அர​சைப் பணி​ய​வைத்​து​வி​ட​லாம் என்ற எண்​ணத்தை இது தோற்​று​வித்​து​விட்​டது.​ தற்​போ​தைய அர​சி​யல் சூழ்​நி​லை​யில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை உறு​தி​மொ​ழியை நிறை​வேற்​று​வதா அல்​லது அதி​லி​ருந்து பின்​வாங்​கி​வி​டு​வது நல்​லதா என்​பது புரி​யா​மல் காங்​கி​ரஸ் உள்​ளது.​

÷2004}ம் ஆண்டு மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான அரசு அமைய ஆந்​தி​ரம் முக்​கிய கார​ண​மாக இருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லில் காங்​கி​ரஸ் அதி​கா​ரத்​தைத் ​ தக்​க​வைத்​துக் கொள்​ள​வும் ஆந்​தி​ரம் உத​வி​யுள்​ளது.

இக்​கட்​டான இந்த நேரத்​தில் சரி​யான முடிவு எடுக்க ​ காங்​கி​ரஸ் தவ​றி​விட்​டால் இரண்டு பக்​க​மும் மக்​கள் ஆத​ரவை காங்​கி​ரஸ் இழந்​து​விட நேரி​டும்.​ இதைக் கவ​னத்​தில் கொண்டு காங்​கி​ரஸ் செயல்​பட வேண்​டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

பிள்​ளை​க​ளைக் கண்​கா​ணிப்​பார்​களா பெற்​றோர்​கள்?

தங்​கள் குழந்​தை​க​ளைப் பள்​ளி​க​ளில் சேர்ப்​ப​தோடு தங்​க​ளது கடமை முடிந்​து​ விட்​டது எனக் கரு​தா​மல் தங்​கள் பிள்​ளை​க​ளின் செயல்​பா​டு​க​ளைப் பெற்​றோர்​கள் கண்​கா​ணித்து வர​வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மாக மாறி வரு​கி​றது.​

​ ​ தொடக்க நிலை​யைக் காட்​டி​லும் உயர் மற்​றும் மேல்​நிலை வகுப்​பு​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​பா​கப் பெற்​றோர்​கள் கவ​னத்​து​டன் கையாள வேண்​டும்.​ ஏனெ​னில் வளர்​இ​ளம் பரு​வத்​தில் உள்ள இவர்​க​ளின் ஒவ்​வொரு செய​லுமே அவர்​க​ளுக்​குச் சரி​யா​கப் படும் என்​ப​தால் இந்​தப் பரு​வத்​தில் அவர்​கள் மீது கண்​டிப்​பாக ஒரு கண் வைக்க வேண்​டும் என்​பதை யாரா​லும் மறுக்க முடி​யாது.​

​ ​ முன்​பெல்​லாம் பள்​ளி​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளைப் பார்த்​தால் மாண​வர்​க​ளுக்​குப் பயம் கலந்த மரி​யாதை வரு​வது இயல்​பாக இருந்​தது.​ அன்​றைய கால​கட்​டத்​தில் மாண​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் தற்​பொ​ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்​னர் தங்​க​ளின் இந்த உய​ரிய நிலைக்​குக் கார​ணம் ஆசி​ரி​யர்​கள்​தான் என்​பதை உணர்ந்து அவர்​க​ளுக்கு பல்​வேறு உத​வி​க​ளைச் செய்து வரு​வ​தை​யும்,​​ வீடு கட்​டிக் கொடுத்​துக் கொண்​டா​டி​ய​தை​யும் இன்​றைய ஒவ்​வோர் ஆசி​ரி​ய​ரும் ஆச்​ச​ரி​யத்​து​டன் பார்க்​கின்​ற​னர்.​

​ ​ ​ இன்றோ பெரும்​பா​லான மாண​வர்​கள் பள்​ளி​க​ளில்​கூட ஆசி​ரி​யர்​களை மதிப்​ப​தில்லை என்று ஆசி​ரி​யர் வட்​டா​ரங்​கள் வருத்​தத்​து​டன் தெரி​விக்​கின்​றன.​ கார​ணம் சினி​மா​வி​லும்,​​ தொலைக்​காட்சி நாட​கங்​க​ளி​லும் காமெடி நடி​கரை ஆசி​ரி​ய​ரா​கவோ,​​ பேரா​சி​ரி​ய​ரா​கவோ காட்டி,​​ அவர்​க​ளைக் கொண்டு ஆசி​ரி​யர்​களை எவ்​வ​ளவு மோச​மா​கச் சித்​தி​ரிக்க வேண்​டுமோ அந்த அள​வுக்கு மோச​மா​கக் காட்​டு​கின்​ற​னர்.​

​ ​ இக்​காட்​சி​க​ளைப் பார்த்​து​விட்டு மறு​நாள் பள்​ளிக்கு வரும் மாண​வ​னுக்​குத் தாமும் அதே​போல் செய்​தால் என்ன என்று எண்​ணத் தோன்​று​கி​றது.​ ​ விளைவு...​ மதிக்​கத்​தக்​க​வர் அல்ல ஆசி​ரி​யர் என்ற எண்​ணம்​தான் அவ​னுள் வளர்​கி​றது.​

இது சாதா​ர​ணம்.​ இப்​படி உள்​ளூர் ஊட​கங்​க​ளும்,​​ வெளி​நாட்டு ஊட​கங்​க​ளும் போட்டி போட்​டுக் காட்​டும் காட்​சி​கள் மாண​வ​னின் மன​தில் நஞ்சை விதைக்​கின்​றன.​ ​ ஊட​கங்​கள் வரு​வ​தற்கு முந்​தைய கால​கட்​டத்​தில் ஒரே பள்​ளி​யில் பயி​லும் மாணவ,​​ மாண​வி​கள் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் பேசு​வ​தைத் தாங்​க​ளா​கவே தவிர்த்து வந்​த​னர்.​ ஆனால் இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன.​ இப்​ப​டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்​தால் பாவம் அவர்​கள் என்ன செய்​வார்​கள்.​

​ ​ இப்​படி ஊடக வெளிச்​சத்​தில் கரைந்து பள்​ளி​க​ளில் வைத்தே மது அருந்​திய மாண​வர்​க​ளை​யும்,​​ ​ இன மோதல்​க​ளில் ஈடு​பட்ட மாண​வர்​க​ளை​யும்,​​ ​ பெண் ஆசி​ரி​யை​க​ளைக் கேலி செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ சக மாண​வி​க​ளைக் கிண்​டல் செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ ​ தேவை​யற்ற புகைப்​ப​டம் எடுத்த மாண​வர்​க​ளை​யும்,​​ படிக்​கா​மல் சுற்​றித்​தி​ரி​யும் மாண​வர்​க​ளை​யும் ஆசி​ரி​யர்​கள் தண்​டிக்க முடி​யாத நிலையே இன்று நில​வு​கி​றது.​

​ ​ அத​னை​யும் மீறித் தண்​டனை கொடுத்​தால் கல்​வித்​துறை அதி​கா​ரி​க​ளின் விசா​ர​ணைக்கு அந்த ஆசி​ரி​யர் உள்​பட வேண்​டும்.​ ​ இத​னைக்​கூட பொறுத்​துக் கொள்​ள​லாம்.​ ஆனால் தண்​டனை கொடுக்​கப்​பட்ட மாண​வர்​க​ளின் பெற்​றோர்​கள்,​​ ஏதோ,​​ இவ​ரா​வது தங்​க​ளது மகன் மீது பற்​றுக் கொண்டு தீய வழி​யில் செல்​லா​மல் திருத்​தி​னாரே என்று மகிழ்ச்சி கொள்​வ​தில்லை.​ மாறாக என் மகனை நீங்​கள் ​(நீ)​ எவ்​வாறு கண்​டிக்​க​லாம் என ஆசி​ரி​யர்​களை நோக்கி அம்​பினை எய்​வ​து​தான் ஆசி​ரி​யர்​க​ளால் ஏற்​றுக் கொள்ள முடி​யா​மல் இருப்​ப​தாக ஆசி​ரி​யர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​

​ ​ எனவே நடக்​கும் நிகழ்​வு​களை அமை​தி​யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்​பதை தவிர ஆசி​ரி​யர்​க​ளுக்கு வேறு ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​

நல்ல மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்​ப​தற்​குக்​கூட மாண​வர்​களை ஆசி​ரி​யர்​கள் கண்​டிக்க முடி​ய​வில்லை.​ கார​ணம் இன்​றைய மாண​வர்​கள் எளி​தில் உணர்ச்​சி​வ​சப்​ப​டக்​கூ​டி​ய​வர்​க​ளாக இருக்​கின்​ற​னர்.

​ இவ்​வி​ஷ​யத்​தில் மாண​வர்​களை விட மாண​வி​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பெரும் அவ​தி​யுள்​ளது.​ இப்​ப​டிப் பள்​ளி​க​ளில் மனம் போன போக்​கில் நடந்து வரும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்கு இருக்​கும் நடை​மு​றைச் ​ சிக்​கல்​களை நாளி​தழ்​கள் மற்​றும் செய்தி ஊட​கங்​க​ளின் ​ மூலம் நன்கு தெரிந்து கொள்​ளும் மாண​வர்​கள்,​​ அதைத் தங்​க​ளுக்​குச் சாத​க​மாக்கி முடிந்​த​வரை தப்​பித்து வரு​கின்​ற​னர்.​

​ ​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் ஏரா​ள​மான பணம் கொடுத்​துத் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​கள்,​​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​க​ளோடு தொடர்​பு​கொண்டு விசா​ரித்து வரு​வ​தால் அங்கு மாண​வர்​கள் செய்​யும் தவறு குறைக்​கப்​ப​டு​கி​றது.​

ஆனால்,​​ அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​க​ளில் பலர் சேர்க்க வரு​வ​தோடு தமது கடமை முடிந்​து​விட்​ட​தா​கக் கருதி பின்​னர் மாற்​றுச்​சான்​றி​தழ் வாங்​கு​வ​தற்​குத்​தான் வரு​கின்​ற​னர்.​

​ தங்​க​ளது மகன் அல்​லது மகள் பள்​ளிக்கு ஒழுங்​கா​கச் செல்​கி​றார்​களா?​ இல்​லையா?​ என்​பது கூட பல பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் சில​ருக்​குத் தங்​கள் பிள்​ளை​கள் எந்த வகுப்​பில் படிக்​கி​றார்​கள் என்​ப​து​கூ​டத் தெரி​வ​தில்லை என்​ப​து​தான் உச்​ச​கட்ட வேதனை.​

​ ​ இன்​றைய கால​நிலை மாற்​ற​மும்,​​ ஊட​கங்​க​ளின் போக்​கும் எந்த அள​வுக்கு மாண​வர்​க​ளின் நல​னைப் பாதித்து வரு​கின்​றன என்​பதைப் பெற்​றோர்​கள் உணர்ந்து,​​ அவர்​க​ளைத் தொடர்ந்து கண்​கா​ணிக்க வேண்​டும்.​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​கள்,​​ சக மாண​வர்​க​ளின் பெற்​றோர்​க​ளு​டன் தொடர்​பு​கொண்டு தனது பிள்​ளை​யின் நிலை என்ன என்​பதை அறிந்து கொள்ள முற்​பட வேண்​டும்.​

​ ​ எழுத்​த​றி​வித்​த​வனை இறை​வ​னா​கக்​கூட கருத வேண்​டாம்.​ மனி​த​னா​கக் கரு​தித் தங்​க​ளது பிள்​ளை​க​ளின் எதிர்​கால ​ வாழ்க்​கைக்​கா​கத்​தான் ஆசி​ரி​யர் செயல்​ப​டு​கி​றார் என்ற எண்​ணத்​து​டன் ஒவ்​வொரு பெற்​றோ​ரும் செயல்​பட்​டால் எதிர்​கால இந்​தி​யா​வின் நம்​பிக்கை நட்​சத்​தி​ர​மாக ஒவ்​வொ​ரு​வ​ரின் மக​னும்,​​ மக​ளும் உயர்​வார்​கள்.​ பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?
கட்டுரையாளர் : வி.​ குமா​ர​மு​ரு​கன்
நன்றி : தினமணி

2018ல் காசோலைக்கு கு‌ட்பை: பிரிட்டன் அரசு

வரும் 2018ம் ஆண்டு முதல், காசோலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப் படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காசோலை பயன்படுத்தும் முறை சமீப காலமாக குறைந்து வருகிறது. மேலும், பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், காசோலை பயன்படுத்தும் முறை 2018ம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விடும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடு: லீச்டென்ஸ்டீன் முதலிடம்

தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே உள்ள லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாகாவும், தொழிற்சாலைகள் அதிகமாகும் இடம் பிடித்துள்ளன. இதனால், அங்கு வாழும் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 55.46 லட்சம் ரூபாயாக உள்ளது. 48.64 லட்சம் ரூபாய் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்துள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 18, 2009

என்ன விலை அமெ​ரிக்க அணு உலை?

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​ அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?
கட்டுரையாளர் : உ.ரா.​ வர​த​ரா​சன்
நன்றி : தினமணி

வாடிக்கை மறந்​தது ஏனோ...

வங்கி ஊழி​யர்​கள் வேலை நிறுத்​தம் செய்​கி​றார்​கள் என்​பது தெரி​யா​மலே சில வாடிக்​கை​யா​ளர்​கள் வழக்​கம் போலவே வங்​கி​க​ளுக்​குச் சென்று புதன்​கி​ழமை பொரிந்து தள்​ளிக் கொண்​டி​ருந்​த​னர்.​ வேலை நிறுத்​தம் செய்​யப்​போ​கி​றோம் என்​பதை ஊழி​யர்​கள்​தான் முன்​கூட்​டியே அறி​வித்​து​வி​டு​கி​றார்​களே,​​ அதைக்​கூட பேப்​ப​ரில் படிக்​கா​ம​லும் டி.வி.யில் கேட்​கா​ம​லும் வங்கி வரை வந்து ஏன்​தான் வயிற்​றெ​ரிச்​சலை கொட்​டிக்​கொள்​கி​றார்​களோ தெரி​ய​வில்லை.​ ​

​ ​ இந்த முறை வங்கி ஊழி​யர்​க​ளின் வேலை நிறுத்​தம் திங்​கள் அல்​லது வெள்​ளிக்​கி​ழ​மை​யாக அல்​லா​மல் புதன்​கி​ழ​மை​யைத் தேர்வு செய்​தது ஏன் என்று புரி​யா​மல் சிறிது நேரம் குழம்​பி​னேன்.​

​ அரு​கில் இருந்த மூத்த வாடிக்​கை​யா​ளர் ஒரு​வ​ரைக் கேட்​டேன்.​ பொன் அகப்​பட்​டா​லும் புதன் அகப்​ப​டாது என்​பார்​கள் அத​னால்​தான் புதன்​கி​ழ​மை​யைத் தேர்ந்​தெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள் என்​றார் அவர்.​

​ மற்​றொ​ரு​வர் சொன்​னார்,​​ மார்​கழி மாத ஆரம்​பம்,​​ கோயி​லுக்​குப் போவ​தற்​காக வங்கி ஊழி​யர்​கள் இந்த நாளைத் தேர்ந்​தெ​டுத்​தி​ருக்​க​லாம் என்​றார்.​ இது அதை​விட அபத்​த​மாக இருந்​தது.​ ​

​ வங்கி ஊழி​யர்​கள் கடு​மை​யாக வேலை செய்து களைத்து,​​ ​ வீட்​டுக்​குப்​போய் அங்​கும் வேலை செய்​து​விட்​டுப் படுத்து,​​ காலை​யில் எழுந்​தி​ருப்​ப​தற்கே சுமார் 7 அல்​லது 8 மணி ஆகி​வி​டும்.​ அப்​ப​டி​யி​ருக்க விடி​யற்​காலை பூஜைக்​காக அவர்​கள் இந்த நாளைத் தேர்ந்​தெ​டுத்​தார்​கள் என்​ப​தும் சரி​யல்ல.​ ​

​ சனி,​ஞாயிறு விடு​மு​றை​யோடு சேர்ந்தே வெள்ளி,​​ திங்​கள் ஆகிய நாள்​களை வேலை நிறுத்​தத்​துக்​குத் தேர்வு செய்​கி​றார்​கள் என்று வங்கி ஊழி​யர்​க​ளைப் பற்றி முன்​னர் குறை கூறப்​பட்​டது.​ அப்​ப​டி​யெல்​லாம் தாங்​கள் சுய நல​மி​கள் அல்​லர் என்று காட்​டவே வாரத்​தின் நடு நாளைத் தேர்ந்​தெ​டுத்​தார்​களோ என்​னவோ?​ இது​வும் ஒரு கணக்​குத்​தான்.​

​ வங்கி ஊழி​யர்​கள் எப்​போது வேலை நிறுத்​தம் செய்​தா​லும் அவர்​க​ளு​டைய கோரிக்கை பொது​ந​லன் சார்ந்​த​தா​க​வும் வலு​வா​ன​தா​க​வும் ஏகா​தி​பத்​திய,​​ முத​லா​ளித்​துவ,​​ மத​வாத,​​ திரி​பு​வாத,​​ பிற்​போக்கு சக்​தி​க​ளுக்கு எதி​ரா​ன​தா​க​வும்​தான் இருக்​கும்.​

​ இந்த முறை பாரத ஸ்டேட் வங்​கி​யு​டன் இந்​தூர் ஸ்டேட் வங்​கி​யைச் சேர்க்​கக்​கூ​டாது என்​பது முக்​கிய கோரிக்கை.​ இதன் உள்ளே நாம் புக வேண்​டாம்.​ ​(அதன் நுட்​பம் நமக்​குத் தெரி​யாது.)​

​ அப்​படி இணைத்​தால் ஏழு கடல்​க​ளும் பொங்​கும்,​​ கட​லில் சுனாமி ஏற்​ப​டும்,​திரு​வண்​ணா​மலை,​​ பரங்​கி​மலை,​​ மதுரை திருப்​ப​ரங்​குன்​றத்​துக்கு அரு​கில் உள்ள பசு​மலை போன்​ற​வை​கூட எரி​ம​லை​க​ளாகி நெருப்​பைக் கக்​கும்,​​ கடு​மை​யான நில அதிர்வு ஏற்​ப​டும் என்​றெல்​லாம் புரி​கி​றது.​ ​

​ அடுத்​தது வங்கி நிர்​வாக நடை​மு​றை​க​ளைச் சீர்​தி​ருத்த வேண்​டும் என்​பது.​ இது​வும் உண்​மை​யி​லேயே வலி​யு​றுத்​தப்​பட வேண்​டிய கோரிக்​கை​தான்.​ நம் பங்​குக்கு நாமும் சில கோரிக்​கை​க​ளைத் தெரி​விக்​க​லாம் என்று நினைக்​கி​றேன்.​ இதை அடுத்த வேலை நிறுத்​தத்​துக்கு வங்கி ஊழி​யர் சங்​கங்​க​ளின் நிர்​வா​கி​கள் பரிசீ​லித்​தால் போது​மா​னது.​

​ வங்​கி​க​ளுக்​குள் வாடிக்​கை​யா​ளர்​கள் வரு​வ​தைத் தவிர்ப்​ப​தற்​கா​கத்​தான் ஏ.டி.எம்.​ என்ற மெஷின் ஆங்​காங்கே வைக்​கப்​ப​டு​கி​றது.​ அப்​படி இருந்​தும் சில அராத்​து​கள் வங்​கி​க​ளுக்கு உள்ளே வந்து பணம் எடுக்க முற்​ப​டு​வதை முற்​றி​லும் தடுக்​கும் வகை​யில் வங்​கி​க​ளில் பணம் போட​லாமே தவிர எடுப்​ப​தற்​காக உள்ளே நுழை​யவே கூடாது என்ற கோரிக்​கையை சேர்த்​துக் கொள்​ள​லாம்.​

​ இப்​போது சென்​னை​யி​லும் புற​ந​கர்​க​ளி​லும் பணம் எடுக்​கப் போகும் வாடிக்​கை​யா​ளர்​க​ளி​டம் கூறப்​ப​டும் முதல் உப​தே​சமே,​​ ஏ.டி.எம்.​ கார்டு வாங்​குங்க,​​ எங்க கிட்​டயே வர வேண்​டாம்,​​ அப்​ப​டியே பணம் எடுத்​துக்​கொண்டு ​(திரும்​பிப்​பார்க்​கா​மல்)​ போயி​டுங்க என்​ப​து​தான்.​

​ அடுத்​தது பென்​ஷன் அக்​க​வுண்ட்,​​ அடிக்​கடி 300,​ 500 என்று எடுக்​கும் எஸ்.பி.​ அக்​க​வுண்ட்,​​ வங்​கிக்கு பெரிய லாபம் தராத கரண்ட் அக்​க​வுண்ட் ஆகி​ய​வற்​றை​யெல்​லாம் தானி​யங்கி மெஷின்​களே கையாள வேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யு​றுத்​த​லாம்.​

வங்​கிக்கு வாடிக்​கை​யா​ளர்​களே வேண்​டாம் என்​ப​தல்ல நோக்​கம்;​ சுய​நி​திக் கல்​லூரி,​​ பள்​ளிக்​கூட நிறு​வ​னர்​கள்,​வியா​பா​ரி​கள்,​பஸ் முத​லா​ளி​கள்,​​ டிரா​வல்ஸ் நடத்​து​கி​ற​வர்​கள்,​40 வய​துக்​குள்​பட்ட வாடிக்​கை​யா​ளர்​கள்,​சுய உத​விக்​குழு மக​ளிர்,​​ வரு​மா​ன​வ​ரித்​துறை,​​ கலால் துறை,​​ ரயில்​வே​யில் டிக்​கெட் ரிசர்​வே​ஷ​னுக்கு உத​வக் கூடி​ய​வர்​கள் போன்ற வங்கி ஊழி​யர்​க​ளுக்​கும் ஏதா​வது பலன்​த​ரக் கூடிய வாடிக்​கை​யா​ளர்​கள் வரு​வதை வங்கி ஊழி​யர்​கள் வேண்​டாம் என்று சொல்​லப்​போ​வ​தில்லை.​

​ ​ பணம் எடுப்​ப​தற்​கான சலா​னில் தேதி போட மறப்​ப​வர்​கள்,​​ பணம் செலுத்​தும்​போது டினா​மி​னே​ஷன் சரி​யா​கப் போடத் தெரி​யா​த​வர்​கள்,​​ வங்கி ஊழி​யர் மெனக்​கெ​டவே அவ​சி​யம் இல்​லாத வகை​யில் தன் வேலை​யைத் தானே பார்த்​துக் கொள்ள முடி​யா​த​வர்​கள்,​​ காலை​யில் வங்​கி​யில் நுழைந்​தால் சாயங்​கா​லம் வரை காத்​தி​ருந்து வேலையை முடித்​துக் கொள்​ளும் அள​வுக்​குப் பொறுமை இல்​லா​த​வர்​கள் வங்​கிக்கு வரவே கூடாது.​

​ ​ பணம் எடுக்க அல்​லது போட ஒரு முறை​யும்,​​ என்ட்ரி போட ஒரு முறை​யும் வேலைக்கு விடு​முறை எடுத்​துக்​கொண்டு வரக்​கூ​டிய நல்ல பழக்​கம் உள்​ள​வர்​கள் தாரா​ள​மாக வங்​கிக்கு வர​லாம்.​

​ வேலை நேரத்​தில் வங்கி ஊழி​யர்​கள் சீட்​டில் இல்​லா​மல் போனால் ஆட்​சே​பம் தெரி​விக்​கி​ற​வர்​க​ளும்,​​ வம்பு பேசும்​போது நாக​ரி​கம் இல்​லா​மல் குறுக்​கிட்டு,​​ ""நாங்க வேலைக்​குப் போக வேண்​டாமா?​'' என்று அப​சு​ர​மாக அங்​க​லாய்ப்​ப​வர்​க​ளும்,​​ செல் போனில் அழைப்பு வந்​தால் கேஷி​யர் உள்​பட யாருமே சீட்​டில் உட்​கார்ந்து பேசி​னா​லும் வெளியே போனா​லும் கூக்​கு​ரல் எழுப்​பு​கி​ற​வர்​க​ளும்,​​ ""உங்க பேங்கே தண்​டம்,​​ எத்​தனை மணி நேரம் காத்​தி​ருக்​கி​றது?​'' என்று சாபம் கொடுப்​ப​வர்​க​ளும் எந்த அரசு வங்​கி​யி​லும் கணக்கு வைத்​துக்​கொள்​ளவே கூடாது என்று வங்கி நடை​மு​றைச் சட்​டத்​தில் திருத்​தமே கொண்​டு​வ​ர​லாம்.​

​ ​ ​ வங்கி ஊழி​யர்​கள் வேலை நேரத்​தில் வேலை​தான் செய்ய வேண்​டும்,​​ திடீர் திடீ​ரென ஸ்டி​ரைக் செய்​யக் கூடாது என்​றெல்​லாம் சுய​ந​ல​மாக நினைக்​கிற வாடிக்​கை​யா​ளர்​களை கணக்கு வைத்​துக் கொள்​ளா​மல் நீக்​கி​வி​டும் அதி​கா​ரம் வங்கி ஊழி​யர்​கள் சங்​கத்​துக்கே தரப்​பட வேண்​டும்.​ இந்த சீர்​தி​ருத்​தங்​கள் அம​லா​னால் வங்​கி​கள் சம​ர​சம் உலா​வும் இட​மாக இருக்​கும் என்​ப​தில் சந்​தே​கம் இருக்​கி​றதா உங்​க​ளுக்கு?
கட்டுரையாளர் : ராணிப்​பேட்டை ரங்​கன்
நன்றி : தினமணி

எரிவாயு, பேட்டரியில் இயக்கும் முதல் பைக் அறிமுகம்

எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்கும் முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெங்களூரில் அறிமுகம் செய்யப் பட்டது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத உலகின் முதல் நவீன பைக் இதுவாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, ஈகோ வெஹிகில்ஸ் நிறுவனம், இடி120 மற்றும் ஸ்டிரைக் என்ற பெயர்களில் இந்த இருசக்கர வாகனங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. இது பெட்ரோலை ‌போல இரண்டு மடங்கு மைலேஜ் வழங்குகிறது. இது எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்குமாறும், 120 சிசி திறன் பைக் குறைவான அளவு கார்பனை வெளியிடுமாறும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பைக்குகளை காஸ் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட இரண்டினாலும் இயக்கலாம். நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டாலும் ‌எரிவாயு மூலம் இயக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்