Friday, March 13, 2009

கலால் வரி செலுத்துவோருக்கு ஏ.சி.இ.எஸ்., திட்டம் அறிமுகம்

கலால் மற்றும் சேவை வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யும் ஏ.சி.இ.எஸ்., திட்டம் சென்னையில் நேற்று துவக்கப்பட்டது. மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை, வரி செலுத்துவோர் மின்னணு முறையில் கணக்குகளை பதிவு செய்யவும், அறிவிப்பு மற்றும் ஆவணங்களை பெறவும், பதிவின் அன்றைய நிலையை அறியவும் ஏ.சி.இ.எஸ்., (ஆட்டோமேஷன் ஆப் சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ்) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் சோதனை முயற்சியாக பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் சேவை வரி மையம் மற்றும் அதிகளவில் வரி செலுத்துவோர் மையம் ஆகிய இரு மையங்களில் இத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர், 'சிஸ்டம்ஸ்' பிரிவு பொது இயக்குனர் பரண்டே, சென்னை மண்டல மத்திய கலால் துறை முதன்மை கமிஷனர் விட்டல் தாஸ் ஆகியோர் கூறியதாவது: வரி செலுத்துவோர், அலுவலகத்திற்கு நேரில் வராமல் மின்னணு முறையில் தனது கணக்குகளை பதிவு செய்ய முடியும். வரி செலுத்தியதில் மீதத்தொகையை திரும்பப் பெறும் கோரிக்கையையும் மின்னணு முறையில் பதிவு செய்யலாம். மேலும் தங்களது பதிவின் நிலையையும் உடனுக்குடன் கம்ப்யூட்டர் மூலம் அறியலாம். இத்திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பெங்களூரில் தற்போது 100 சதவீதம் பேர் இம்முறையிலேயே தங்களது கணக்கை பதிவு செய்கின்றனர். தற்போது சென்னையில் இரு மையங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாளை கோவையிலும், இம்மாத இறுதிக்குள் பெலாபூர், புவனேஷ்வரிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கொள்கைகளை உருவாக்குவதற்கான எம்.ஐ.எஸ்., அறிக்கைகளையும் உருவாக்க முடியும். நாடு முழுவதும் உள்ள 580 மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கும் 'வைட் ஏரியா நெட்வொர்க்' திட்டம் 580 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டில்லியில் தகவல் மையமும், சென்னையில் பேரிடர் சமயங்களில் தகவல் மீட்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


வீடியோ கால் வசதியுடன் 3ஜி சேவை எப்போது?

சென்னையில், 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய 3ஜி சேவை வர்த்தக ரீதியாக மக்களுக்கு கிடைக்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் துறையில் புதிய புரட்சி மூன்றாம் தலைமுறை, '3ஜி' சேவை. இதில், பேசுபவரும் எதிர்முனையில் இருப்பவரும் முகங்களை பார்த்துக்கொள்ளும் வீடியோ கால் வசதி, வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக துவக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் சென்னையில் முதல்வர் கருணாநிதியால், '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.எஸ்.என்.எல்., தலைவர் குல்தீப்கோயல், ஏப்ரல் இறுதியில் இச்சேவை வர்த்தக ரீதியாக அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார். ஆனாலும், '3ஜி' சேவை சென்னையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''3 ஜி சேவை துவக்குவதற்கு சென்னையில் 600 '3ஜி' பி.டி.எஸ்., கருவிகள் டவர்களில் பொருத்தப்பட வேண்டும். இதற்காக புதிய டவர்கள் அமைக்கப்பட வேண்டியதில்லை; ஏற்கனவே உள்ள டவர்களிலும் அமைக்கலாம். இந்த வகையில் தற்போது 25 மட்டுமே பொருத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடந்து வருகின்றன. முழுமையாக சென்னையில் 3 ஜி சேவை வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வர ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் ஆகலாம். மேலும், சென்னைக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
'3ஜி' கட்டண விவரம்: பி.எஸ். என்.எல்., நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.ஜி., நிறுவனத்துடன் இணைந்து 3ஜி மொபைல் போனை 7000 ரூபாயிலும், 3 ஜி சிம்கார்டை 300 ரூபாயிலும் வழங்குகிறது. இதில் போஸ்ட் பெய்டு மற்றும் பிரீபெய்டு என இரண்டு திட்டங்களும் உள்ளன. குறிப்பாக போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாத வாடகை 1000 ரூபாய். வாய்ஸ் காலுக்கு நிமிடத்திற்கு 10 காசுகள், உள்ளூர் வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 2 ரூபாய், எஸ்.டி.டி., வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில், 1600 இலவச கால்களும், 75 இலவச வீடியோ கால்களும் அளிக்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்திற்கு 2500 ரூபாய் மாத வாடகை. இதில் உள்ளூர் வீடியோ காலுக்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி.,க்கு 2 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சலுகைகள் இதற்கும் பொருந்தும்.
நன்றி : தினமலர்


கோடீஸ்வர அந்தஸ்தை இழந்த 29 இந்திய தொழிலதிபர்கள்: லட்சுமி மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவின் லட்சுமி மிட்டலை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலில் உள்ளதாக, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 97 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத் தில் இந்தியாவின் லட்சுமி மிட் டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கடந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும், முகேஷ் அம் பானி ஐந்தாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பொருளாதார மந்த நிலையால் அதிகளவு நஷ்டமடைந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்தாண்டு ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, இந் தாண்டு 34வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால், இந்தாண்டு மிக அதிகளவில் நஷ்டமடைந்தார்.
போன் பேச்சு குறைவு: தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொரு ளாதார நெருக்கடியால், மக்கள் குறைந்த நிமிடங்களே பேசுகின்றனர். மேலும், இந்தியாவின் பொரு ளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை நெருக்கடி, அதிகரித்து வரும் போட்டி போன்றவற்றால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு, கடந் தாண்டை விட கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் கே.பி.சிங், தற் போது 98வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து விஜய் மல்லையா, துளசி தாண்டி, ஆனந்த் ஜெயின் உட்பட 29 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு 'போர்ப்ஸ்' பத்திரி கை செய்தியில் கூறப் பட் டுள் ளது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இது, நாட்டின் கோடீஸ் வரர்களின் மொத்த சொத்து மதிப் பில் இரண்டு மடங்கு குறைவு. ஆனால், அமெரிக்க பெடரல் அரசு கடந்த மாதம் 2010ம் ஆண் டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு, அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இழப்பு எவ்வளவு?
* உலகில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 100 லட்சம் கோடி ரூபாய்.
* கடந்த ஆண்டு 1,125 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, தற்போது 793 ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், தற்போது முதல் முறையாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
* உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
* முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேட்ஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வாரன் பபெட் சொத்து மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்.
நன்றி : தினமலர்


Thursday, March 12, 2009

வோடபோன் புதிய சலுகை

பிளாக்பெர்ரி மொபைல் போன் வைத்திருந்தால், மாதம் 299 ரூபாய் செலுத்தி கூடுதல் வசதிகள் பெறும் புதிய திட்டத்தை வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்து, வோடபோன் எஸ்ஸார் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குனர் ஹரித்நாக்பால் கூறியதாவது:
பிளாக்பெர்ரி மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ப்ரோஸ் யூமர் லைட்-299' எனும் புதிய திட்டத்தில் இணைய தள சேவையுடன் கூடிய 10 இ-மெயில்கள் வரையிலான வர்த்தக தனிநபர் அக்கவுன்டுகள் மற்றும் பல்வேறு பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகளை மாதம் 299 ரூபாய் வாடகையில் வழங்கப்படுகிறது. விண்டோஸ் லைவ் மெசஞ்ஜர், கூகுள் டாக், யாகூ மெசஞ்ஜர் மற்றும் பிளாக்பெர்ரி மெசஞ்ஜர் உட்பட்ட பிரபல மெசேஜிங் சேவைகளுக்கான அன்லிமிடெட் அணுகு வசதி, அட்டாச்மென்ட்களை பார்த்தல், பிளாக்பெர்ரி ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிளாக்பெர்ரி கனெக்ட் ஆதரவு சாதனங்களில் இப்புதிய வசதியை பெறலாம். இவ்வாறு ஹரித்நாக்பால் கூறினார்.
நன்றி : தினமலர்


பணத்தை எங்கே டிபாசிட் செய்வது நல்லது?

இந்த வாரம் திங்கள் மட்டும் தான் சந்தை இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சந்தைகளுக்கு விடுமுறை. ஆனால், வாரத்தின் துவக்க தினமான திங்களே ஒரு இறக்கத்தை தந்து, இனிமேல் இதுபோல் இறக்கத்திலேயே தான் இருக்குமோ என்ற ஒரு பயத்தை நமக்கு தந்து சென்றது. வானம் தொட்டும் விடும் தூரம் தான் என்று கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால், பாதாளம் தொட்டுவிடும் தூரம் தான் என்ற நிலையில் சந்தை கீழே செல்கிறது.
இந்திய சந்தைகளுக்கு முன்பே துவங்கிய ஆசிய சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்திய சந்தைகளிலும் அது எதிரொலித்தது. அன்றைய தினம் இந்திய மியூச்சுவல் பண்டுகள் 126 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியது ஒரு ஆறுதலான விஷயம்.
சந்தை மூன்று ஆண்டின் கீழ் நிலையை மறுபடி எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். ஆசிய அளவில் ஹாங்காங் சந்தை 5 சதவீதமும், நிக்கி 1.2 சதவீதமும் கீழே விழுந்திருந்தன. மும்பை பங்குச் சந்தை 165 புள்ளிகள் கீழே சரிந்து முடிவடைந்தது.
அதிகம் பாதிக்கப்பட்டது ஜெயப்பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் 5.3 சதவீதம் குறைந்து 66 ரூபாய் அளவிலும், ஸ்டேட் பாங்க் 4.7 சதவீதம் குறைந்து 897 ரூபாய் அளவிலும், இந்துஸ்தான் லீவர் 3.3 சதவீதம் குறைந்து 216 ரூபாய் அளவிலும், ஐ.டி.சி., 4 சதவீதம் குறைந்து 159 ரூபாய் அளவிலும் முடிவடைந்தது.
இறுதியாக மும்பை பங்குச் சந்தை 165 புள்ளிகள் சரிந்து 8,160 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் சரிந்து 2,573 புள்ளிகளுடனும் முடிந்தது.
ஸ்டெர்லைட் வாங்கிய ஆசர்கோ: கடந்த ஆகஸ்டில் ஆசர்கோவை வாங்குவதற்கான டீலில் முன்னணியில் ஸ்டெர்லைட் இருந்திருந்தாலும், தற்சமயம் உலகளவில் இருக்கும் பொருளாதார மந்தத்தினால் மறுபடி பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்காவின் செம்பு சுரங்க கம்பெனியான ஆசர்கோவை இந்தியாவின் ஸ்டெர்லைட் வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக கொடுக்கப்படும் தொகை 8,500 கோடி ரூபாய். முன்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தொகையை விட 4,500 கோடி ரூபாய் குறைவு.
ஸ்பைஸ்ஜெட், கோ-ஏர் இணைப்பு? ரயிலில் சென்று கொண்டிருந்தவர்களை எல்லாம் விமானத்தில் பறக்க வைத்தவர்கள் லோகாஸ்ட் விமானக் கம்பெனிகள். அது போல பல கம்பெனிகள் இந்தியாவில் வந்து, ஒரு முறையாவது விமானத்தில் பறக்கவேண்டும் என்ற கனவில் இருந்தவர்களையெல்லாம் விமான பயணத்திற்கே அடிமையாக்கி சென்றனர்.
அடிமையாக்கிய பிறகு கட்டணங்களை கூட்டினர். பயணிகள் புத்திசாலிகள், மறுபடி ரயிலுக்கு தாவி விட்டனர்.
ஆதலால், விமானக் கம்பெனிகள் இணைந்து நடத்தினால் தான் லாபம், இல்லையெனில் தொடர்ந்து நஷ்டம் தான் என்ற நிலை பலருக்கும். முன்பு கிங்பிஷர், ஏர்டெக்கான் இணைப்பைப் பார்த்தோம். தற்போது ஸ்பைஸ்ஜெட், கோ-ஏர் ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கின்றன. பயணிகளுக்கு விமானக் கட்டணங்கள் மறுபடி குறைந்தால் சரிதான். பங்குச் சந்தைகளின் சரிவு, கம்பெனிகளை கார்ப்பரேட் டிபாசிட்களை திரட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளியுள்ளது. சிறிது காலத்திற்கு முன் சில கம்பெனிகளே கார்ப்பரேட் டிபாசிட்களை திரட்டி வந்தன. அந்த மார்க்கெட்டே சரிந்து கிடந்தது. ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. பல கம்பெனிகள் அது போல டிபாசிட்டையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. ஒரு மார்க்கெட்டின் சரிவு இன்னொரு மார்க்கெட்டின் வளர்ச்சி. இது தான் உலக நியதி. ஆனால், பங்குச் சந்தைகள் அதலபாதாளத்திற்கு சென்று இதுதான் முதலீடு செய்ய ஏற்ற சமயம் என்று ஆர்வத்தை பலருக்கு தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம், கார்ப்பரேட் டிபாசிட்களின் வட்டி விகிதங்கள் வா வா வந்து டிபாசிட் செய் என்று அழைக்கிறது. எங்கு செல்வது என்று தெரியாமல் முதலீட்டாளர்கள் முழிக்கும் நிலை. எப்படி முடிவெடுப்பது? ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்குச் சந்தை பக்கம் செல்லலாம்.
ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கார்ப்பரேட் டிபாசிட் பக்கம் செல்லலாம். அங்கும் நல்ல ரேட்டிங் உள்ள கம்பெனிகளாக பார்த்து டிபாசிட் செய்வது தான் உத்தமம். இல்லாவிடில், கால முடிவில் பணம் திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஆகலாம் அல்லது பணம் வராமலும் போகலாம்.
கடந்த இரண்டு நாட்களாக உலக அளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் சிறிது பாசிடிவாகவே இருந்தன. இந்திய அளவில் வேறு ஏதும் நிகழ்வுகள் இருக்காத பட்சத்தில் சந்தை சிறிது மேலே செல்லும் வாய்ப்புகள் உண்டு.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்வு

உணவு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்த்தப் பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓட்டல் உரிமையாளர்கள் பலர், சாப்பாடு வகைகளில் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை ஏற்றத் தை சப்தம் இன்றி அரங்கேற்றி உள்ளனர்.
சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ரூ.25க்கு விற்கப்படும் அளவு சாப்பாடு ரூ.26க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு ரூ.31க்கு விற்கப்படுகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் தற்போது ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட அளவு சாப்பாடு ரூ.31க்கும், ரூ.40க்கு விற்பனை செய்யப்படும் ஸ்பெஷல் சாப்பாடு ரூ.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டல்களில் சாப்பாடு விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, டிபன் வகைகளிலும் விலை உயர்வு செய்யப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''அரிசி, பருப்பு வகைகள் மட்டுமின்றி மளிகை சாமான் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வில் இருந்து தப்பிக்கவும், எங்கள் தொழிலை காப்பாற்றும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற் பட்டுள்ளது. முதல் கட்டமாக சாப்பாடு விலையை உயர்த்தி உள்ளோம்.
''வரும் 1ம் தேதிக்குள் மூலப்பொருட்களின் விலையில் சரிவு ஏற்படாத பட்சத்தில் டிபன் வகைகளின் விலையை இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.
நன்றி : தினமலர்


Wednesday, March 11, 2009

மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக முதலீடு செய்வதை ஐ.பி.எம்.நிறுத்தவில்லை

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக செய்யும் முதலீட்டை குறைக்கவில்லை. ஐ.பி.எம்.மின் தலைமை அதிகாரி சாமுவேல் பால்மிசனோ, அதன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பின்நோக்கி பார்ப்பது இல்லை. எப்போதுமே முன்நோக்கி தான் பார்க்கிறோம். தொடர்ந்து ஆர் அண்ட் டி சென்டர்களை நிறுவுவதிலும், மற்ற கம்பெனிகளை வாங்குவதிலும், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதிலும் முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இக்கட்டான வேளையிலும் நாங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஐ.பி.எம். நிறுவனம், நிதி மோசடியில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூம் அதன் 51 சதவீத பங்குகளை விற்கும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்