Tuesday, January 12, 2010

களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ: 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்

டில்லியில் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய 10வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கண்காட்சியை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 25 நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் புதிய ரக கார்கள் பார்வைக்கு வைத்து, பார்வையாளர்களின் கண்களை விரிய வைத்தனர். சுமார் 2,100 அரங்களை கொண்ட இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பேட்டரியில் இங்கும் கார்கள், காற்றை அதிக மாசுபடுத்தாத எரிவாயு தொழில்நுட்ப வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. மொத்தம் 25 புதிய வாகனங்கள், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கார்கள், பைக்குகள் அட்டகாச அறிமுகம் :களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் பங்கேற்று புதிய கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தினர்.

டில்லி ஆட்டோ எக்ஸ்போ கடந்த 5ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடந்தது. இந்த கண்காட்சிக்கு இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்து இருந்தன. உலகளவில், கார் மற்றும் பைக்குகள் விற்பனை சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் விற்றுமுதல் தற்போது ரூ.90 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், இந்தியாவில் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனையில் சில மாதங்களுக்கு மட்டுமே தொய்வு நிலை காணப்பட்டது. 2009ம் ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான், டில்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடந்துள்ளது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் புதிய கார்களையும், பைக்குகளையும் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில், வர்த்தக வாகனங்களும், பைக்குகளும், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய கார்கள் பற்றிய விவரம் வருமாறு:

வோக்ஸ்வாகன் போலோ: ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வாகன் நிறுவனம், கண்காட்சியில் போலோ காரை அறிமுகப்படுத்தியது. சிறிய கார்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள போலோ கார், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. 1200 சிசி பெட்ரோல், 1200 சிசி டீஸல் என இரண்டு இன்ஜின்கள் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா ஆகிய கார்களுக்கு, போலோ கார் கடும் போட்டியை அளிக்கும்.

ஜெனரல் மோட்டார்ஸ் பீட்: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இது விற்பனையிலும் உள்ளது. தற்போது 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார் விற்பனையில் உள்ளது. 1000 சிசி திறன் கொண்ட டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. பீட் காரின் விலை ரூ.3.34 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரை( எக்ஸ்ஷோரூம் டில்லி) உள்ளது. பீட் கார், ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.

ஹோண்டாவின் புதிய கார்: ஹோண்டா நிறுவனம், '2சிவி' என்ற கோட்நேம் கொண்ட புதிய காரை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது, 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ, டொயோட்டோ நிறுவனத்தின் இடியோஸ், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு சவாலாக இருக்கும்.

டொயோட்டோ இடியோஸ்: ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம், இடியோஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகனின் போலோ, மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், இந்தியாவில் ஜூலையில் அறிமுகமாக உள்ள நிஸானின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.
அசத்தலான சொகுசு கார்கள் அறிமுகம்
டில்லி கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு போட்டுக் கொண்டு சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்தின. அதன் விவரம் வருமாறு:

மாருதி புதிய கார்: மாருதி சுசூகி நிறுவனம் 'ஆர்ஐஐஐ' என்ற கோட்நேமுடன், ஆறு இருக்கைகள் கொண்ட புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மல்டி பர்ப்பஸ் வைக்கிள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஸ்கோடா யெடி: ஜெர்மனியின் ஸ்கோடா நிறுவனத்தின் யெடி கார் தான் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைக்கிள் வரிசையில் இந்த கார் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் மத்திய பகுதியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இதன் விலையை ஸ்கோடா நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், ரூ.14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியா, பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் எக்ஸ்1, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேமரோ போன்ற கார்களும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நன்றி : தினமலர்

தமி​ழ​கம் வந்த தமி​ழர்​கள் விரட்​டப்​பட்​டது ஏன்?

உலகம் முழு​வ​தி​லும் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் பரவி வாழ்​கி​றார்​கள்.​ இன்று நேற்​றல்ல,​​ பல நூறாண்​டு​க​ளா​கத் தமி​ழர்​கள் பல நாடு​க​ளில் குடி​யேறி அந்​நா​டு​க​ளையே தங்​கள் சொந்த நாடு​க​ளாக ஏற்​றுக் கொண்டு வாழ்​கி​றார்​கள்.​ அதி​லும் ஏழா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்பு இலங்​கை​யும் இந்​தி​யா​வும் கட​லால் பிரிக்​கப்​ப​டு​வ​தற்கு முற்​பட்ட காலத்​திற்கு முன்பே இரு​பு​றத்​தி​லும் வாழ்ந்த தமி​ழர்​கள் மொழி​யா​லும் பண்​பாட்​டா​லும் மிக நெருங்​கி​ய​வர்​க​ளாக இருந்​தார்​கள்.​

சங்க காலப் புல​வ​ரான ஈழத்து பூதந்​தே​வ​னார் காலத்தி​லி​ருந்து சென்ற நூற்​றாண்​டில் ஆறு​முக நாவ​லர் காலம் வரை​யி​லும்,​​ அதற்​குப் பிறகு இன்​று​வ​ரை​யி​லும் மட்​டு​மல்ல,​​ இனி எதிர்​கா​லத்​தி​லும் ஈழத் தமி​ழர்​க​ளுக்​கும் தமி​ழ​கத் தமி​ழர்​க​ளுக்​கும் உள்ள உறவு என்​பது தொப்​புள் கொடி உற​வா​கும்.​

ஈ​ழத் தமி​ழர்​கள் மட்​டு​மல்ல பிற​நா​டு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளும் தங்​க​ளது பண்​பாட்​டுத் தாய​க​மா​கக் கரு​து​வது தமிழ்​நாட்​டையே ஆகும்.​ தமிழ்​நாட்​டுக்​கும் பிற நாடு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளுக்​கும் இடையே உள்ள உறவு என்​பது தாய்-​சேய் உறவு ஆகும்.​

மொழி,​​ பண்​பாடு,​​ கலை ஆகி​ய​வற்​றின் அடிப்​ப​டை​யில் உல​கம் எங்​கும் நடை​பெ​றும் தமிழ் ஆய்​வு​களை ஒருங்​கி​ணைக்​க​வும் உல​கத் தமி​ழர்​களை ஒன்​று​ப​டுத்​த​வும் உல​கத் தமிழ் ஆராய்ச்சி மன்​றம் ஈழத் தமி​ழ​றி​ஞர் தனி​நா​ய​கம் அடி​கள்,​​ தமி​ழ​கத்து அறி​ஞர்​கள் வ.அய்.​ சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ சாலை இளந்​தி​ரை​யன் போன்ற பல​ரின் கூட்டு முயற்​சி​யால் உரு​வாக்​கப்​பட்​டது.​

மு​தல் உல​கத் தமி​ழ​ராய்ச்சி மாநாடு மலே​சி​யா​வில் 1966-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்​சி​றப்​பாக நடை​பெற்​றது.​ உல​கெங்​கும் உள்ள பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​கள் இம்​மா​நாட்​டில் பங்கு பெற்​ற​னர்.​ அப்​போது தமி​ழ​கத்​தின் முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.​ பக்​த​வத்​ச​லம் தலை​மை​யில் இரா.​ நெடுஞ்​செ​ழி​யன்,​​ பி.டி.ராஜன் உள்​பட பல​கட்​சித் தலை​வர்​கள் தமி​ழ​கக் குழு​வா​கச் சென்று கலந்து கொண்​ட​னர்.​

1968-ம் ஆண்டு ஜன​வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்​னை​யில் 2-வது உல​கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை​பெற்​ற​போ​தும் அனைத்து நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​க​ளும் வேறு​பாடு இன்றி கலந்து கொண்​ட​னர்.​ ராஜாஜி,​​ பெரி​யார்,​​ காம​ரா​சர்,​​ ஜீவா,​​ ம.பொ.சி.​ போன்ற பல​வேறு கட்​சித் தலை​வர்​க​ளை​யும் முத​ல​மைச்​ச​ராக இருந்த அண்ணா,​நேரில் சென்று அழைத்து இம்​மா​நாட்​டில் சிறப்​பு​ரை​யாற்ற வைத்​தார்.​ அவர்​க​ளும் அவ​ரு​டன் ஒத்​து​ழைத்​த​னர்.​ அனை​வ​ரும் தமி​ழர்​கள் என்ற உணர்​வு​டன் அர​சி​யல் வேறு​பா​டு​களை மறந்து ஒன்​றி​ணைந்து உல​கத் தமி​ழர்​க​ளின் ஒற்​று​மைக்கு வலிமை சேர்த்​த​னர்.​

1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரி​சி​லும் 1974-ம் ஆண்டு நான்​கா​வது மாநாடு யாழ்ப்​பா​ணத்​தி​லும் ஒற்​றுமை குலை​யாத வகை​யில் நடை​பெற்​றது.​ யாழ்ப்​பாண மாநாட்​டில் சிங்​கள ராணு​வம் புகுந்து சுட்டு 9 தமி​ழர்​கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது.​

1981-ம் ஆண்டு ஜன​வரி 4 முதல் ​ 10-ம் தேதி வரை மது​ரை​யில் நடை​பெற்ற ஐந்​தா​வது உல​கத் தமிழ் மாநாட்​டின் போது முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.ஜி.ஆர்.​ விடுத்த அழைப்பை அனைத்​துக்​கட்​சித் தலை​வர்​க​ளும் ஏற்று மாநாட்​டில் பங்கு கொண்​ட​னர்.​ ஆனால் தி.மு.க.​ தலை​வ​ரான கரு​ணா​நிதி மாநாட்​டில் கலந்து கொள்​வ​தைத் தவிர்த்​தார்.​ அன்றி​லி​ருந்து இந்த ஒற்​று​மை​யைச் சீர்​கு​லைக்​கும் நட​வ​டிக்​கை​கள் தொடங்​கின.​

1995-ம் ஆண்டு ஜன​வரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற 8-வது மாநாட்​டின் போது முத​ல​மைச்​சர் ஜெயல​லி​தா​வின் அழைப்பை ஏற்று பல கட்​சித் தலை​வர்​க​ளும் கலந்து கொண்​ட​னர்.​ அதி​லும் கரு​ணா​நிதி கலந்து கொள்​ள​வில்லை.​ இம்​மா​நாட்​டின் போது​தான் தமி​ழர்​களை அவ​ம​திக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.​

சு​வீ​டன் நாட்​டுத் தமி​ழ​றி​ஞர் பீட்​டர் சால்க்,​​ ஈழத் தமி​ழ​றி​ஞர் சிவத்​தம்பி ஆகி​யோர் மாநாட்​டில் உரை​யாற்ற அழைக்​கப்​பட்டு,​​ இங்கு வந்த பிறகு அவர்​க​ளைக் கட்​டா​யப்​ப​டுத்தி வெளி​யேற்​றிய வெட்​க​க​ர​மான நிகழ்ச்சி நடை​பெற்​றது.​ உல​கத் தமி​ழர்​கள் அனை​வ​ரும் இதை வன்​மை​யா​கக் கண்​டித்​த​னர்.​

1998-ம் ஆண்டு தஞ்​சை​யில் நடை​பெற்ற ​ 6-வது உலக சைவ மாநாட்​டில் கலந்து கொள்ள வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்த தமி​ழர்​கள் பலர் வந்​தி​ருந்​த​னர்.​ ஆனால் தென்​னாப்​பி​ரிக்​கா​வில் இருந்து வந்​தி​ருந்த வீர​பத்​தி​ரன்,​​ இலங்​கை​யைச் சேர்ந்த மனோன்​மணி சண்​மு​க​தாஸ்,​​ பிரிட்​ட​னைச் சேர்ந்த டாக்​டர் சிவ​தா​சன் தம்​ப​தி​யி​னர் ஆகிய நால்​வர் வெளி​யேற்​றப்​பட்​ட​னர்.​ இதற்கு எதி​ராக மாநாட்​டுப் பிர​தி​நி​தி​கள் அற​வ​ழி​யில் போரா​டி​னர்.​ ஆனா​லும் எது​வும் நடக்​க​வில்லை.​ அப்​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி இதைத் தடுக்க எது​வும் செய்​ய​வில்லை.​

அ​தற்​குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20,​ 21 ஆகிய நாட்​க​ளில் சென்​னை​யில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் தொடக்க விழா மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த ஜெயல​லிதா அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ அர​சி​ய​லுக்கு அப்​பாற்​பட்ட மாநாடு என்று தெரிந்​தும் இந்​தத் தடை விதிக்​கப்​பட்​டது.​ உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு அந்​தத் தடையை நீக்கி மாநாட்​டுக்கு அனு​மதி வழங்​கி​யது.​

÷2004-ம் ஆண்டு பெங்​க​ளூ​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் மூன்​றாம் ஆண்டு நிறைவு மாநாட்​டின் போது மாநாட்​டைத் தொடங்​கி​வைப்​ப​தற்​காக அழைக்​கப்​பட்​டி​ருந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் ஈழ​வேந்​தன்,​​ சென்னை விமான நிலை​யத்​தி​லேயே திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ அதற்​கு​ரிய கார​ணம் எது​வும் அவ​ருக்கு அதி​கா​ரி​க​ளால் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ தெற்​கா​சிய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான சார்க் நாடு​க​ளைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் யாராக இருந்​தா​லும் இந்த நாடு​க​ளுக்​குள் சுற்​றுப்​ப​ய​ணம் செய்து வரு​வ​தற்கு விசா எது​வும் தேவை​யில்லை.​ இந்த விதி​யும் மீறப்​பட்​டது.​ இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரான ஈழ​வேந்​த​னுக்கு உரிய விசா இருந்​தும் அவர் திருப்பி அனுப்​பப்​பட்ட அவ​லம் நேர்ந்​தது.​ அப்​போ​தும் முத​ல​மைச்​ச​ராக ஜெயல​லிதா இருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12,​ 13-ம் தேதி​க​ளில் சேலம் நக​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் நான்​காம் ஆண்டு நிறைவு மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி,​​ அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ இந்​தத் தடை​யும் உயர் நீதி​மன்​றத்​தால் நீக்​கப்​பட்டு மாநாடு வெற்​றி​க​ர​மாக நடை​பெற்​றது.​

2009-ம் ஆண்டு டிசம்​பர் 26,​ 27-ம் தேதி​க​ளில் தஞ்சை நக​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் ​ ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக வந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் சிவாஜி​லிங்​கம் சென்னை விமான நிலை​யத்தி​லி​ருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ இது​வும் முத​ல​மைச்​சர் கரு​ணா​நி​தி​யின் ஆட்​சி​யின்​போ​து​தான் நடை​பெற்​றது.​

உ​ல​கத் தமி​ழர்​கள் ஒன்​று​கூடி தமது பிரச்​னை​கள் குறித்து கருத்​துப் பரி​மாற்​றம் செய்து கொள்​ளும் சுதந்​தி​ரம் தமிழ்​நாட்​டில் இல்லை என்​பதை இந்த வெளி​யேற்ற நிகழ்ச்​சி​கள் நமக்கு எடுத்​துக்​காட்​டு​கின்​றன.​ தமிழ்​நாட்​டைத் தங்​கள் தாய​க​மா​கக் கரு​து​கின்ற வெளி​நாட்​டுத் தமி​ழர்​கள்,​​ தமி​ழ​கம் வரும்​போ​தெல்​லாம் இப்​படி விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது ஒட்​டு​மொத்த தமி​ழி​னத்​திற்கே அவ​மா​ன​மா​கும்.​

ஜெ​யல​லிதா அல்​லது கரு​ணா​நி​தி​யின் ஆட்​சிக் காலங்​க​ளில் தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் மாநா​டு​க​ளில் பங்​கேற்க வந்​த​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்​தால் பிர​ள​யம் எது​வும் நேர்ந்​தி​ருக்​காது.​ தமி​ழ​றி​ஞர்​களை அவ​ம​தித்த குற்​ற​மும் முத​ல​மைச்​சர்​கள் மீது படிந்​தி​ருக்​காது.​ வெளி​யேற்​றப்​பட்ட தமி​ழ​றி​ஞர்​கள் ஆனா​லும்,​​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் ஆனா​லும் அவர்​கள் அனை​வ​ரும் தமி​ழ​கத்​திற்​குப் புதி​ய​வர்​கள் அல்​லர்.​ எத்​த​னையோ முறை வந்து சென்​ற​வர்​கள்.​ ஜெயல​லிதா வேண்​டு​மா​னால் அவர்​க​ளைப் பற்றி அறி​யா​மல் இருக்​க​லாம்.​ ஆனால் கரு​ணா​நிதி அவர்​கள் குறித்து நன்கு அறிந்​த​வர்.​ என்​றா​லும் தில்​லி​யின் தமி​ழர் அவ​ம​திப்பு போக்​கி​னைத் தடுத்து நிறுத்தி தமி​ழர்​க​ளின் உரி​மையை நிலை​நாட்ட இரு​வ​ருமே தவ​றி​விட்​ட​னர்.​

இந்​தி​யா​வில் பிற மொழி பேசு​கி​ற​வர்​கள் நடத்​தும் உலக மாநா​டு​க​ளுக்கு வரு​கி​ற​வர்​கள் தாரா​ள​மாக வந்து சுதந்​தி​ர​மா​கப் பேசி​விட்​டுப் போகி​றார்​கள்.​ உல​கத் தெலுங்​கர் மாநாடு சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் ஹைத​ரா​பாத் நக​ரில் நடை​பெற்​ற​போது பிற​நா​டு​க​ளில் வாழும் தெலுங்​கர்​கள் அந்த மாநாட்​டில் கலந்​து​கொள்ள வந்​த​போது எவ்​வி​தத் தடை​யும் விதிக்​கப்​ப​ட​வில்லை.​ அவ்​வாறே பெங்​க​ளூ​ரில் நடந்த உலக கன்​னட மாநாட்​டி​லும் பிற நாடு​க​ளைச் சேர்ந்த கன்​ன​டர்​கள் தாரா​ள​மா​கக் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​

உ​ல​கப் பஞ்​சாபி மாநாடு சண்​டீ​க​ரில் நடை​பெற்​ற​போது கன​டா​வில் வாழ்ந்து கொண்​டி​ருந்த காலிஸ்​தான் இயக்க ஆத​ர​வா​ளர்​கள் இந்​தியா வர இந்​தி​யத் தூத​ர​கம் விசா தர மறுத்​து​விட்​ட​போது,​​ பஞ்​சாப் முத​ல​மைச்​சர் பிர​த​ம​ரி​டம் போராடி விசா வழங்​கச் செய்​தார்.​ இந்​திய அர​சால் தடை​செய்​யப்​பட்ட காலிஸ்​தான் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் இந்​தி​யா​வுக்​குள் தாரா​ள​மாக வந்து தங்​கள் மொழி மாநாட்​டில் சுதந்​தி​ர​மா​கப் பேச​மு​டி​கி​றது.​ இதற்கு பஞ்​சாப் முத​ல​மைச்​ச​ரின் மொழி உணர்​வும் மத்​திய அர​சு​டன் போரா​டும் மன உறு​தி​யுமே கார​ண​மா​கும்.​

த​மிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமிழ் மாநாட்​டுக்கு வந்த பிற​நாட்​டுத் தமி​ழர்​கள் வெளி​யேற்​றப்​பட்​ட​தற்கு தான் பொறுப்​பல்ல மத்​திய அரசே பொறுப்பு என்று சொல்லி முத​ல​மைச்​சர் தப்​பித்​துக்​கொள்ள முடி​யாது.​ மத்​திய ஆட்​சி​யி​லும் இவ​ரது கட்சி ஓர் அங்​கம்.​ பிர​த​ம​ரி​டம் இவ​ருக்கு மதிப்பு நிறைந்த செல்​வாக்கு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் தமி​ழர்​க​ளுக்கு எதி​ரான மத்​திய அர​சின் நட​வ​டிக்​கை​களை இவர் தடுத்து நிறுத்த முன்​வ​ர​வில்லை என்று சொன்​னால் அது இவ​ரது சம்​ம​தத்​தோடு நடை​பெ​று​கி​றது என்​ப​து​தான் பொருள்.​

மு​த​ல​மைச்​சர் கரு​ணா​நிதி முன்​னின்று நடத்த இருக்​கும் உல​கத்​த​மிழ் செம்​மொழி மாநாட்​டில் பங்​கு​பெற உலக நாடு​களி​லி​ருந்து இத்​தனை இத்​தனை பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்ள இருக்​கி​றார்​கள் என்ற பட்​டி​யலை முத​ல​மைச்​சர் மிக்க பெரு​மி​தத்​து​டன் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ மற்​ற​வர்​கள் நடத்​தும் உல​கத்​த​மிழ் மாநா​டு​க​ளுக்கு வந்த பலரை வெளி​யேற்​றி​ய​வர் இப்​போது இவர் நடத்​தும் மாநாட்​டுக்​கா​வது உல​கத் தமி​ழர்​களை அனு​ம​திக்க முன்​வந்​தி​ருப்​பது மகிழ்ச்​சிக்​கு​ரி​யது.​ இவர்​க​ளில் யாரை​யே​னும் வெளி​யேற்​றா​மல் இருப்​பார் என நம்​பு​வோ​மாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற அரிய வாய்ப்பு: இந்தியன் வங்கி ஏற்பாடு

கிழந்த ரூபாய் நோட்டுகளை, நல்ல நோட்டுகளாக மாற்ற இன்றே சரியான நாள். பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், உடனடியாக இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு முகாமுக்கு சென்று, அதனை புதிய நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம். இதற்காக தான், இந்தியன் வங்கி இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது. இந்தியன் வங்கியின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வங்கியின் சிறப்பு முகாம்களான சென்னை துறைமுகம்,​​ தியாகராயநகர், சேத்துபட்டு,​​ மதுரை மெயின்,கோவை மெயின்,​​ ஈரோடு,​​ கடலூர்,​​ கிருஷ்ணகிரி,​​ காஞ்சிபுரம்,​​ கும்பகோணம்,​​ தஞ்சாவூர், கோவை மெயின்,​​​ கிருஷ்ணகிரி,​​ காஞ்சிபுரம்,​​ கும்பகோணம்,​​ தஞ்சாவூர், ஈரோடு,​​ கடலூர் உள்ளிட்ட கிளைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


Monday, January 11, 2010

தகுதியுள்ளது வாழும்

ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!

ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.

இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.

"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?

தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!

எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.

அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.

அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி

தமிழ் வெறும் துக்​க​டாவா...?

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​ பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​

ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
நன்றி : தினமணி

மொபைல் போன் மூலமான இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிரித்து வருகிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் தான் மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வகையில் ஏராளமான நிறுவனங்கள் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதையடுத்து, மொபைல் போனில் இன்டர் நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்த வண்ணம் உள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைல்போன் கூட்டமைப்பு இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில், 47கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. மொபைல் போன் வைத்துள்ளவர்களில் 20 லட்சம் பேர் இன்டர்நெட் வசதியை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர்.
நன்றி : தினமலர்


Sunday, January 10, 2010

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் : 17 காப்பீடு திட்டங்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பங்குச்சந்தை முதலீடு வாயிலாக அதிக லாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையிலும், அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
நன்றி : தினமலர்