Monday, January 11, 2010

மொபைல் போன் மூலமான இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிரித்து வருகிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் தான் மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வகையில் ஏராளமான நிறுவனங்கள் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதையடுத்து, மொபைல் போனில் இன்டர் நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்த வண்ணம் உள்ளது. இன்டர்நெட் மற்றும் மொபைல்போன் கூட்டமைப்பு இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில், 47கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. மொபைல் போன் வைத்துள்ளவர்களில் 20 லட்சம் பேர் இன்டர்நெட் வசதியை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர்.
நன்றி : தினமலர்


2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பரே..

பாரதி said...

முனைவர்.இரா.குணசீலன் வருகைக்கு நன்றி