Wednesday, January 6, 2010

22 மாதங்கள் இல்லாத அளவு உயர்வுடன் தொடங்கியது நிப்டி

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, 22 மாதங்கள் இல்லாத அளவு நிப்டி உயர்வினை சந்தித்து 5,300 புள்ளிகளை நெருங்கியது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5300 புள்ளிகளை நிப்டி தாண்டியது என்பது குறிப்பிடத் தக்கது.

காலை 9.01 மணி அளவில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 5,296 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 17,749 புள்ளிகளோடு தொடங்கியது.


அதிகமாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா ஸ்டீல், ஸ்டீலைட் இன்டஸ்டிரீஸ், ஐடியா, பார்தி ஏர்டெல், ஐ.டி.எப்.சி., ஜித்தால் ஸ்டீல் அன்ட் பவர், யுனிடெக், டி.எல்,எப்., மற்றும் செயில் ஆகியவற்றின் பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டப் பட்டன.


இருப்பினும், மாருதி, பி.என்.பி., ஹூரோ ஹோண்டா ஆகியவை நஷ்டத்தை சந்தித்தன.


டி.சி., கார்ப் பங்குகள் இன்று 25 சதவீத பிரீமியத்துடன் 265 ரூபாய்க்கு வர்த்தகமாயிற்று, இதன் பங்கு வெளியீட்டு விலை ரூ. 212.
நன்றி : தினமலர்

No comments: