Friday, December 11, 2009

தெலுங்கு,​​ ஆனால்...

தெலங்​கானா எனப்​ப​டும் ஹைத​ரா​பாத் மாநி​லத்தை,​​ அன்​றைய பிர​த​மர் ஜவா​ஹர்​லால் நேரு,​​ ஆந்​திர மாநி​லத்​து​டன் 1956-ம் ஆண்​டி​லேயே சேர்ப்​ப​தற்கு உத்​த​ர​விட்​டார்.​ அதற்கு ஒரு நியா​ய​மான கார​ணம் இருந்​தது.​ மொழி​வாரி மாநி​லம் என்ற அள​வு​கோல் வைக்​கப்​பட்ட பிறகு,​​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமை​யு​மா​னால்,​​ அது தவ​றான முன்​னு​தா​ர​ண​மாக அமைந்​து​வி​டும் என்று நேரு கரு​தி​னார்.​ மேலும் மறு​சீ​ர​மைப்பு செய்​யப்​ப​டும் மற்ற மொழி​வாரி மாநி​லங்​க​ளி​லும் இத்​த​கைய கருத்​து​கள் எழக்​கூ​டும் என்​றும் கரு​தி​னார்.​

நேரு​வின் எண்ண ஓட்​டத்​தில் தவறு காண முடி​யாது.​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமைந்​தி​ருந்​தால்,​​ தமிழ்​நாட்​டில்​கூட கொங்​கு​நாடு,​​ தொண்​டை​நாடு,​​ பாண்​டி​நாடு,​​ நாஞ்​சில் நாடு என்று தனித்​த​னி​யா​கக் கோரிக்கை எழுந்​தி​ருக்​கும்.​ இதே​போன்ற மன​நிலை கர்​நா​ட​கத்​தி​லும் கேர​ளத்​தி​லும் ஏன் இந்​தி​யா​வின் வேறு பல மாநி​லங்​க​ளி​லும் ஏற்​பட்​டி​ருக்க வாய்ப்பு உண்டு.​

ஆந்​திர மாநி​லத்​தில் ஏறக்​கு​றைய 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக ஆட்சி செய்த காங்​கி​ரஸ் கட்சி,​​ தெலங்​கா​னா​வின் ஆதங்​கம் கருத்​தில் கொள்​ளப்​ப​டும் என்று நேரு அளித்த வாக்​கு​று​தியை மறந்து,​​ தெலங்​கானா என்​ற​ழைக்​கப்​ப​டும் 10 மாவட்​டங்​க​ளின் ​(ஹைத​ரா​பாத்,​​ அடி​லா​பாத்,​​ கரீம்​ந​கர்,​​ கம்​மம்,​​ மக​பூப்​ந​கர்,​​ மேடக்,​​ நல​கொண்டா,​​ நிஜா​மா​பாத்,​​ ரெங்​கா​ரெட்டி,​​ வரங்​கல்)​ வளர்ச்​சி​யில் அக்​கறை காட்​ட​வில்லை என்​ப​தால்​தான் இன்​ன​மும் தெலங்​கானா பிரச்னை உயிர்ப்​பு​டன் மீண்​டும் எழு​கி​றது.​ ​

தெலங்​கா​னா​வில்​தான் படிப்​ப​றி​வில்​லா​த​வர் அதி​கம்,​​ இங்​கு​தான் ஏழை விவ​சா​யி​கள் தற்​கொலை செய்​து​கொள்​வ​தும் அதி​கம்.​ இங்​கு​தான் வறுமை தாண்​ட​வ​மா​டு​கி​றது.​ குழந்​தை​களை விற்​கி​றார்​கள்.​ கிருஷ்ணா கோதா​வரி நதி​கள் ஓடி​னா​லும் வறட்​சி​தான் மிச்​சம்.​ தெலங்​கா​னா​வில்​தான் ஆந்​திர மாநி​லத்​தின் ஒரே ஐஐடி,​​ மண்​டல பொறி​யி​யல் கல்​லூரி உள்​ளது.​ ரயில்வே மண்​டல அலு​வ​ல​கம் உள்​ளது.​ ராம​குண்​டத்தி​லி​ருந்​து​தான் ஏவு​கணை ஏவப்​ப​டு​கி​றது.​ ஆனால் இந்த நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​று​வோர் பெரும்​பா​லோர் தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்​த​வர்​கள் அல்ல.​ இவை​தான் இப்​போது தெலங்​கானா போராட்​டத்​துக்​குத் தூண்​டு​த​லாக இருக்​கி​றது.​

சத்​தீஸ்​கர்,​​ ஜார்க்​கண்ட்,​​ உத்​த​ராஞ்​சல் ஆகிய மாநி​லங்​கள்,​​ தற்​போது தெலங்​கானா பகு​தி​யை​விட மிகச்​சி​றிய பரப்​ப​ளவு கொண்​டவை.​ அவற்​றைத் தனி​மா​நி​ல​மாக அறி​வித்​துள்​ள​போது,​​ சுமார் 3.5 கோடி மக்​கள்​தொகை கொண்​டி​ருக்​கும் தெலங்​கா​னாவை ஏன் தனி மாநி​ல​மாக அறி​விக்​கக்​கூ​டாது என்​பது தற்​போது முன்​வைக்​கப்​ப​டும் வாதம்.​ ​

சரி,​​ நேரு​வின் எண்​ணத்​துக்கு மாறாக,​​ ஒரே மொழி​பே​சும் மாநி​லத்தை இப்​போது இரண்​டா​கப் பிரித்​து​விட்​டால் பிரச்னை தீர்ந்​து​வி​டுமா என்​றால் அது​வும் சந்​தே​கம்​தான்.​ தெலங்​கா​னா​வில் எந்​த​வித சுய​மான நிதி​ஆ​தா​ரத்​துக்​கும் வழி​யில்லை.​ ​ இந்த மாநி​லம் உரு​வாக்​கப்​பட்​டால்,​​ அது முழுக்​க​மு​ழுக்க மத்​திய அர​சின் நிதி​யு​த​வியை மட்​டுமே நம்​பி​யி​ருக்க முடி​யும்.​ நக்​ஸல் ஒழிப்பு மற்​றும் வறுமை ஒழிப்​புத் திட்​டங்​க​ளுக்​காக ஆண்​டு​தோ​றும் சில ஆயி​ரம் கோடி ரூபாய் தெலங்​கானா பகு​திக்கு ஒதுக்​கப்​பட்​டா​லும் இவை முறை​யா​கப் போய்ச் சேர​வில்லை என்​கி​ற​போது,​​ தனி மாநி​ல​மாக மாறி​னால் மட்​டும் நிலைமை சரி​யா​கி​வி​டுமா என்​பது சந்​தே​கம்​தான்.​ ​

தெலங்​கானா கோரிக்கை மக்​கள்​பி​ரச்​னை​யாக உரு​வெ​டுத்​துள்​ளது என்று சொல்​வ​தை​விட இது சில அர​சி​யல் தலை​வர்​க​ளின் சுய​லா​பத்​துக்​காக எழுப்​பப்​ப​டு​கி​றது என்​ப​தால்​தான் இந்​தப் புதிய மாநி​லம் உரு​வா​வதை நாம் ஒரு​மு​றைக்கு இரு​முறை ​ஆய்​வுக்கு உள்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கி​றது.​ ​

தற்​போது தெலங்​கானா ராஷ்ட்​ரிய சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவ் நடத்​திய உண்​ணா​வி​ர​தப் போராட்​ட​மும் கல​வ​ரங்​க​ளும் தெலங்​கானா மாநி​லம் உரு​வாக்​கு​வ​தற்​காக என்​ப​தைக் காட்​டி​லும்,​​ கடந்த சட்​ட​மன்​றத் தேர்த​லில் படு​தோல்வி அடைந்த இக்​கட்​சி​யின் கெüர​வத்தை நிலை​நாட்​ட​வும் தனது தலை​மையை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும்​தான்.​ கடந்த தேர்த​லில் 45 இடங்​க​ளில் போட்​டி​யிட்டு,​​ 10 இடங்​க​ளில் மட்​டுமே வெற்றி பெற்​றது இக்​கட்சி.​ இதற்கு முந்​தைய தேர்த​லில் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி அமைத்து 26 எம்​எல்ஏ,​​ 5 எம்.பி.க்க​ளைப் பெற்று மத்​திய மாநில அர​சில் பங்கு வகிக்​க​வும் செய்த டி.ஆர்.​ எஸ்.​ கட்​சிக்கு இது படு​தோல்வி.​ இதை ஈடு​செய்​யவே தற்​போது நடந்த போராட்​டங்​கள்.​

மேலும்,​​ தற்​போது ஆந்​திர முதல்​வர் ரோசய்​யா​வுக்​குத் தலைவலி கொடுக்க வேண்​டும் என்​கிற ஒரே கருத்​தில் செயல்​பட்​டு​வ​ரும் மறைந்த ராஜ​சே​கர ரெட்​டி​யின் மகன் ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆத​ரவு சந்​தி​ர​சே​கர ராவுக்கு இருக்​கி​றது என்​ப​தும் இப்​போ​ராட்​டத்​தின் நோக்​கத்தை நீர்த்​துப்​போ​கச் செய்​கி​றது.​

தெலங்​கானா தனி​மா​நி​லம் ஆவது குறித்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று சோனியா தலை​மை​யில் நடந்த காங்​கி​ரஸ் கட்​சிக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.​ இதை​ய​டுத்து சந்​தி​ர​சே​கர ராவ் தனது உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொண்​டுள்​ளார்.​ அதே​நே​ரத்​தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் எதிர்ப்​பைத் தெரி​வித்து ராஜி​நாமா செய்​யத் தயாராகி இருக்கிறார்கள்.

இன்​னொரு சிக்​கல் இப்​போதே ஆந்​தி​ரத்​தில் ஆரம்​ப​மா​கி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லம் என்​றால் ராய​ல​சீமா எந்த விதத்​தில் குறைவு?​ கட​லோர ஆந்​தி​ரம் எந்​த​வி​தத்​தில் குறைவு?​ அவற்​றை​யும் தனி மாநி​ல​மாக்​குங்​கள் என்ற கோரிக்கை எழத்​தொ​டங்​கி​விட்​டது.​ ஒரு மாநி​லத்​தின் அனைத்து மக்​க​ளுக்​கும் ஒரே வித​மான சலு​கை​கள்,​​ நலத்​திட்​டங்​கள்,​​ நிதி,​​ தொழில்​வ​ளர்ச்​சித் திட்​டங்​கள் கிடைக்​கச் செய்ய வேண்​டிய பொறுப்​பும்,​​ கண்​கா​ணிக்க வேண்​டிய கட​மை​யும் மத்​திய அர​சுக்கு இருக்​கி​றது.​ அதில் தவ​று​கள் நிக​ழும்​போது,​​ இப்​ப​டி​யான போராட்​டங்​க​ளை​யும் நியா​யப்​ப​டுத்​தும் நிலை உரு​வா​கி​வி​டு​கி​றது.​

மக்​க​ளாட்​சி​யில்,​​ ஆட்​சி​யில் இருப்​ப​வர்​கள் மக்​க​ளின் உணர்​வு​க​ளைப் பிர​திப​லிக்​கா​மல் போனால்,​​ தெலங்​கானா போன்ற கோரிக்​கை​கள் எழு​வ​தைத் தவிர்க்க முடி​யாது!
நன்றி : தினமணி

No comments: