Tuesday, December 29, 2009

வரவேற்கத்தக்க முடிவு

பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பதும் என்றும், தேர்தலுக்கான மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவற்றின் கோரிக்கையும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் இத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான்.

மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைத்தால், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையின்போது வாழ்த்துத் தெரிவிக்காமல், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்துத் தெரிவிப்பவர் முதல்வர் கருணாநிதி. அதிலும் குறிப்பாக தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தவர். அப்படியிருக்க, தேதியை மாற்ற வேண்டாம் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆச்சரியம்தான். இருப்பினும், பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதையும், அவர்கள் ஏற்கனவே இத்தொகுதியில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் பார்க்கும்போது, இத்தேர்தலைத் தள்ளிவைக்காமல் சீக்கிரம் முடித்துவிட திமுகவின் அரசியல் தந்திரம் தெரிகிறது.

இந்தக்கூட்டம் நடத்தப்படும் முன்பாகவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த கட்சிகள் தெரிவ்த்த சில காரணங்களில் ஒன்று இது- வாக்குகளை விலைக்கு வாங்கும் கட்சியினர் பணப்பட்டுவாடாவை பொங்கள் இனாமாக விநியோகிக்கும்போது இதைப்போலீசார் தடுப்பதோ அல்லது பணத்தைப் பறிமுதல் செய்வதோ இயலாத காரியமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பணம் கொடுக்கும் கட்சிகளை யாரும் தடுத்துவிட முடியாது என்பதைக் கடந்தகால இடைத்தேர்தல்களில் பார்த்தாகிவிட்டதாலும் தேர்தல் இனாம் அல்லது பொங்கல் இநாம் கேட்டும் வாங்கும் அளவுக்கு வாக்காளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது என்பதாலும் இது ஒரு முக்கிய காரணமாகச் சொல்லும்படியாக இல்லாமல் போனது.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த இடைத்தேர்தலின் வெற்றியில் குரிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வரதராஜன் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் ரீதியில் ஏற்புடையதே.

இந்த விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை பொங்கள். அதுவும் மூன்று நாளைக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழா. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்கள் அனைவரும் வியாபாரம் மற்றும் பண்டிகைக்கான கொள்முதல்களில் பரபரப்பாக ஈடுபடுவது இந்த நேரத்தில்தான். எல்ல வியாபாரிகளும் தங்கள் நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மேலும் கூட திறந்து வைத்திருந்து வியாபாரம் பார்த்துவிட ஆர்வம் காட்டும் தருணம் இது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் இடைத்தேர்தல் நடத்தினால்,அத்தனை வியாபாரமும் பாதிக்கும்.

மேலும், தேர்தலுக்காகக் களப்பணி ஆற்ற வேண்டிய தொண்டர்கள் அனைவருமே உள்ளூர் மக்கள். இவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள்.

இடைத்தேர்தலில் எல்லா கட்சித் தொண்டர்களும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது ழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது வழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை விட்விட்டு அரசியல் களத்தில் குதிப்பதால் மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு. பென்னாகரம் போன்ற சிறிய ஊரில் அத்தனை தையலர்களும் அவரவர் கட்சிக்காகத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கான புதுத்துணியைத் தைப்பது எங்கே? ஒருவேளை, போட்டியிடும் கட்சிகள் தங்கள் தொழிலாளர் அணியின் தையலர்கள் அனைவரையும் அழைத்துவந்து இலவசத் துணி, இலவசமாகத் தைத்துத் தரும் பணியைச் செய்தால் அதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தடுக்கும்? இதுபோன்றுதான் எல்லா வேலைகளிலும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பண்டிகை கொண்டாடும் ஆர்வத்துக்குத் தடையாக அமையும். வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காது.

சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு அரிசி, வெல்லம் எல்லாமும் இலவசமாகத் தரப்பட்து. இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்தச் சலுகையை அவர்களுக்கு அளிக்க முடியாது. இதற்காகத் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் அரிசி,. வெல்லம் கொடுத்து, தனியாக ஒருநாள் பொங்கலிட்டுக் கொண்டாட முடியமா?

இப்பிரச்சனையில் 'தேர்த்ல் தேதியை மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை' என்று முதல்வர் கருûணாநித் கூறியிருக்கிறார். ஏன் இத்தகைய நடைமுறை இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் அதற்கான அதிகாரிகள் இருக்கும்போது, ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியை மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியம்? தேதியை நிர்ணயிக்கும் உரிமையைத் தேர்தல் ஆணையம் விட்டுக் கொடுக்க வேண்டியதேயில்லை. ஆனால் இரண்டு மூன்று தேதிகளை மட்டும் தெரிவிக்கும்படி மாநில அரசைக் கேட்டாலும் போதுமே! தொகுதி இடம்பெற்றுள்ள ஒரு மாநில அரசு, இந்த அளவுக்குக்கூட கலந்தோசிக்க உரிமை பெற்றிருக்கவில்லை?

இத்தனை கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கருத்துக்களைக் கேட்டிருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவின் நடவடிக்கையும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவும் சரியானதே. இருப்பினும், இடைத்தேர்தல் தேதியைத் தீர்மானிக்கும்போது மாநில அரசின் கருத்துக்களைக் கேடடறிவதை இனியாகிலும் தேர்தல் ஆணையம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இது புதிய நடைமுறையே என்றாலும், இதை மேற்கொள்வதால் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த கௌரவக் குறைச்சலும் ஏற்பட்டுவிட்டது.
நன்றி : தினமணி

No comments: