Monday, November 9, 2009

340 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

சென்செக்ஸ் இன்று 340 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. இந்திய பங்குச்சந்தையில் இன்று முழுவதும் ஏறுமுகம் காணப் பட்டது. காலையில் வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.95 புள்ளிகள் உயர்ந்து 16268.23 புள்ளிகளாக தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 31.95 புள்ளிகள் உயர்ந்து 4828.10 புள்ளிகளோடு தொடங்கியது. பொருளாதார வளர்ச்சிக்கு வழி காணும் நிதி ஊக்குவிப்பு தொடரும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் உரை காரணமாக இன்றைய பங்குச்சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலையில் பங்குச்சந்தை தொடங்கிய போது, அதிகமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரி 1.61 சதவீதமும், இன்போசிஸ் டெக்னாலஜி 0.46 சதவீதமும், டாடா கன்சல்டன்சி 0.28 சதவீதமும் உயர்ந்தன.
இந்திய பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு‌ எண் சென்செக்ஸ் 340.44 புள்ளிகள் உயர்ந்து 16498.72 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.25 4898.40 புள்ளி‌களோடு நிலைப்பெற்றது.
நன்றி : தினமலர்


No comments: