Saturday, October 17, 2009

நோக்கியாவின் காலாண்டு நஷ்டம் 556 மில்லியன் யூரோ

உலகின் முன்னனி செல்போன் நிறுவனமான நோக்கியா, தனது காலாண்டு நஷ்டம் சுமார் 556 மில்லியன் என அறிவித்துள்ளது. உலகின் பொருளாதார பின்னடைவு மற்றும் சாம்சங், ஐ-போன் போன்ற நிறுவனங்களின் போட்டியால் தனது விற்பனை குறைந்துள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை சம்பாதித்த நோக்கியா நிறுவனம், செல்போன் பயன்படுத்துவோரின் ரசனைக்கு ஏற்ப தனது மாடல்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா நிறுவனம் செய்போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


No comments: