Wednesday, September 2, 2009

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம்

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் மாதங்கள் விஷேச பண்டிகைகள் அதிகம் வரும் மாதங்கள் என்பதால், சர்க்கரை உபயோகம் அதிகமாகும். இந்தியாவில் விவசாயிகள் கரும்புகள் பயிரிடுவதை குறைத்து விட்டதால், சர்க்‌கரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட நாடுகளின் இருந்து இந்தியாவிற்கு சர்க்கரை இறக்குமதி செய்யப் பட உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை கி‌லோவிற்கு ரூ. 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோதுமைக்கு கொள்முதல் விலை அதிகம் கொடுக்கப் படுவதால், விவசாயிகள் கோதுமை பயிரிடுவதை அதிகரித்து, கருப்பு பயிரிடுவதை குறைந்துள்ளதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: