Tuesday, August 11, 2009

குறைந்த தண்ணீர் செலவில் அரிசி சாகுபடி : இலங்கை அரசு புதிய யுக்தி

குறைந்த தண்ணீர் செலவில் அரிசி சாகுபடியை அதிகமாக்கும் வகையில் இலங்கை அரசு புதிய தொழில்நுட்ப யுக்தியை கண்டுபிடித்துள்ளது. தற்போது வழக்கத்தில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே செலவழித்து அதிக மகசூல் பெறக் கூடிய தொழில் நுட்ப யுக்தியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போது நிலவரப்படி 1 கிலோ அரிசி உற்பத்தி செய்ய, 3000 லிட்டர் வரை தண்ணீர் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் படி 800 லிட்டர் தண்ணீர் செலவில் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்யப்படும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை தொழில்நுட்பம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு சோதனையின் அடிப்படையில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் போனஸ் நன்மை என்னவென்றால் , ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாமாம்.
நன்றி : தினமலர்


No comments: