Saturday, August 1, 2009

15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் கோல்கட்டாவில் ஓடக்கூடாது

15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் இன்று முதல் கோல்கட்டா ரோடுகளில் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி கோல்கட்டா ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் வேலையில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். மேற்கு வங்க அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டதால், இன்று அங்குள்ள ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் 15 வருடங்களுக்கு மேல் பழைமையான பஸ், டாக்ஸி மற்றும் சுமார் 80,000 மூன்று சக்கர வாகனங்கள் அகற்றப்படும் என்று தெரிகிறது. பஸ் ஓட்டுபவர்கள் ஏற்கனவே பழைய பஸ்களை ஓட்டுவதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். ஆனால் ஆட்டோ மற்றும் மூன்று சக்கர வாகன உரிமையாளர்கள், என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாங்கள் ஓட்டத்தான் செய்வோம் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: