Wednesday, July 15, 2009

மீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சென்சென்ஸ் 14,200 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4,200 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் 2.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. இன்போசிஸ் மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களை தவிர மற்ற எல்லா நிறுவனங்களுமே வளர்ந்திருந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 399.54 புள்ளிகள் ( 2.88 சதவீதம் ) உயர்ந்து 14,253.24 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 122.10 புள்ளிகள் ( 2.97 சதவீதம் ) உயர்ந்து 4,233.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஹின்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், ஹீரோ ஹோண்டா, பிஹெச்இஎல், ரிலையன்ஸ் பவர், மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவன பங்குகள் 6 முதல் 8.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: