Tuesday, July 14, 2009

அரசு ஊழியர்கள் ஏர் - இந்தியா விமானத்தை மட்டுமே பயன்படுத்த உத்தரவு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் - இந்தியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் மத்திய தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இனிமேல் மத்திய அரசு ஊழியர்கள், அலுவலக வேலையாக வெளியூருக்கு பயணம் செய்யும் போது, இனிமேல் ஏர் - இந்தியா விமானத்தையே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏர் - இந்தியா விமானங்களையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் - இந்தியா, நிதி பிரச்னையை குறைக்கும் விதமாக, குறைந்த காலத்திற்கு கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு கடன் கொடுப்பவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்கிறார்கள். ஒரு வேளை அரசு ஊழியர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஏர் - இந்தியா விமானம் செல்லவில்லை என்றால், எவ்வளவு தூரத்திற்கு ஏர் - இந்தியாவில் போக முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு போய்விட்டு, அப்புறம் வேறு விமானத்தில் போய்க்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வேறு விமானமும் ஏர் - இந்தியாவுடன் கூட்டு வைத்திருக்கும் விமானமாக இருந்தால் நல்லது என்றும் சொல்லியிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அவர்களது அலுவலக பயணங்களுக்கு தனியார் விமானங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கடந்த 2005 டிசம்பரில்தான் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
நன்றி : தினமலர்


1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்